Snake (rep) Pexels
இந்தியா

மனைவியை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற கணவர் - காரணம் என்ன?

Keerthanaa R

சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண மனிதர் வரை பாம்பை கண்டால் கிலி தான். அது இருக்கும் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டோம், ஆனாலும் சில சமயம் மனிதர்களை பாம்பு கடிப்பது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

அப்படி பாம்பு கடித்தால், அந்த நபருக்கு முதல் உதவி கொடுத்து பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம். பெரும்பாலும், நம்மை எந்த பாம்பு கடித்தது என்று நாம் கவனிக்க மாட்டோம். அது கடித்துவிட்டது என்பது மட்டும் தான் கவனத்தில் இருக்கும்.

இப்படியிருக்க, உத்தரபிரதேசத்தில் ராமேந்திர யாதவ் என்பவரது மனைவியை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த அந்த நபர், கூடவே அவரது மனைவியை கடித்த பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து எடுத்துசென்றுள்ளார்.

பாம்பிற்கு காற்றோட்டம் வேண்டும் என்பதால், அந்த பாட்டிலில் அங்கங்கு ஓட்டைகள் போட்டு அதை பத்திரமாக எடுத்து சென்றுள்ளார். மனைவிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள், "பாம்பை ஏன் எடுத்து வந்தீர்கள்? " என்று கேட்க,

"என் மனைவியை கடித்தது எந்த பாம்பு என்று நீங்கள் கேட்டால் நான் என்ன செய்வேன்? அதனால் தான் கையோடு எடுத்துவந்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பிய பின், ராமேந்திர யாதவ் அந்த பாம்பை பத்திரமாக காட்டில் விடுவித்து விட்டார்.

இதே போல, இன்னொரு சம்பவம், தாகத்துடன் இருந்த பாம்பிற்கு தன் கைகளில் தண்ணீர் ஊற்றி குடிக்க கொடுத்த நபரின் வீடியோ இணையதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?