கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கேள்வி; அண்ணாமலை பதிலடி- என்ன நடந்தது? Twitter
இந்தியா

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கேள்வி; அண்ணாமலை பதிலடி- என்ன நடந்தது?

Priyadharshini R

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தீவிரமாக பிரச்சார பணிகளில் அந்த மாநில ஆளுங்கட்சியான பாஜகவும், எதிர்க் கட்சியான காங்கிரஸும் களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றிருந்தர்.

அந்த பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, திடீரென ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியிலே நிறுத்தச் சொன்னார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு வைரமுத்து, கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது.

ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்.

கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம்! என வைரமுத்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்தது குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் "தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் பதிவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

"ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே.

நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.

தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி.

கவலை வேண்டாம்!" என்று அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?