சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து; 10 பேர் காயம் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து; 10 பேர் காயம் - என்ன நடந்தது?

Priyadharshini R

சென்னையில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டு 5 பெட்டிகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்தாலும், ஆங்காங்கே ரயில் விபத்துகள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் சென்னை ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று இரவு சார்மினார் விரைவு ரயில் புறப்பட்டு, ஹைதராபாத்தை நோக்கிச் சென்றது. அங்கு நாம்பள்ளி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த உடன், ஓட்டுநர் ரயிலை மெதுவாக ஓட்டியுள்ளார். இருந்தபோதிலும் எதிர்பாராத விதமாக 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன.

நடைமேடையில் மோதி ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. இதில் சுமார் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளும் காவல்துறை ஊழியர்களும் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள லால்குடா ரயில்வே அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?