Vinesh Phogat returns her Arjuna and Khel Ratna awards Twitter
இந்தியா

மத்திய அரசு விருதுகளை திருப்பி அளித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

Priyadharshini R

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷணின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரிஜ் பூஷண் சிங் மீது ஆறு மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மே மாதத்தில் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினா்.

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த சம்மேளனத்தின் அடுத்த தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசின் விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, வீரேந்தர் சிங் ஆகியோரும் அறிவித்தனர்.

இந்நிலையில் தான் பெற்ற மத்திய அரசு விருதுகளை திருப்பி அளிப்பதாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத்தும் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் வினேஷ் போகத் கடிதம் எழுதியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?