FIFA 2022 : அர்ஜென்டினா அணிக்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? - முழு விவரம் Messi
ஸ்போர்ட்ஸ்

FIFA : 248 கோடி வென்ற பிரான்ஸ்; சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த ஜாக்பாட் தொகை எவ்வளவு?

Antony Ajay R

சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ஒரு மாதம் நடந்து கடந்த ஞாயிறு அன்று முடிவுக்கு வந்தது.

இதில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப்படைத்தது அர்ஜென்டினா அணி.

உலகத்தில் அதிகமாக விளையாடப்படும் விளையாட்டு என்பதனால் கால்பந்துக்கு ரசிகர்களும் அதிகம்.

கிட்டத்தட்ட 350 கோடி மக்கள் இந்த போட்டிகளை நேரலையில் பார்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விளையாட்டு என்பதையெல்லாம் கடந்து இதன் பின் பலகோடி டாலர்கள் புழங்கும் வணிகமும் இருக்கிறது.

வணிகத்துக்கு ஏற்ற பரிசுத்தொகையும் வீரர்களுக்கு வழங்கப்படும் தானே?

உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ஒவ்வொரு முறையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

2022ம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த ஆண்டு வழங்கப்படும் பரிசுத்தொகை 440 மில்லியன் டாலர்கள் என அறிவித்துள்ளது ஃபிஃபா.

இதுவே 2018ம் ஆண்டில் 400 மில்லியன் டாலர்களாகவும் 2014ம் ஆண்டில் 358 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது.

440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் 364 கோடி ரூபாய்.

இந்த பணத்தில் அதிகபட்சமாக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு 42 மில்லியன் டாலர்கள் அதாவது 347 கோடி ரூபாய் வழநப்படும்.

இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 248 கோடி ரூபாய் வழங்கப்படும்.

மூன்றாவது இடத்தைப் பிடித்த குரோஷியா அணிக்கு 220கோடி மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த மொரோக்கோ அணிக்கு 206 கோடி பரிசுத்தொகையாக வாழங்கப்படும்.

இதுமட்டுமின்றி 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பெறும் அணிகளுக்கு 140 கோடி மற்றும் 9 முதல் 16 இடங்களைப் பெறும் அணிகளுக்கு 107 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

மற்ற அணிகளுக்கு தலா 9 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய்.

கடந்த 1994ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

28 ஆண்டுகாலத்தில் இந்த தொகை 42 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கால்பந்தின் நிலை என்ன?

ஆண்களுக்கான கால்பந்து விளையாட்டு வணிகத்தில் பெருமளவில் வளர்ந்திருப்பது தான் இவ்வளவு அதிக பரிசுத் தொகை வழங்கப்படக் காரணம்.

2023ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பெண்களுக்கான கால்பந்து உலகக்கோப்பையில் 60 மில்லியன் டாலர்கள் மட்டுமே மொத்த பரிசுத் தொகை என FIFA கூறியுள்ளது.

இது இந்த தொடரின் பரிசுத்தொகையை விட 7 மடங்கு குறைவு என்றாலும் இதுவே மிகப் பெரிய தொகை தான் என்கின்றனர்.

காரணம் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் 30 மில்லியன் டாலர்கள் மட்டுமே பரிசுத் தொகையாக இருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?