CSK vs KKR: சேப்பாக்கில் CSKவின் கடைசி போட்டி - தோற்றபின் கேப்டன் தோனி பேசியது என்ன? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

CSK vs KKR: சேப்பாக்கில் CSKவின் கடைசி போட்டி - தோற்றபின் கேப்டன் தோனி பேசியது என்ன?

Keerthanaa R

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது சிஎஸ்கே. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாடும் கடைசி லீக் போட்டி இதுவே.

சென்னை அணி தோற்றாலும், ரசிகர்கள் என்னவோ உற்சாகத்தில் தான் ஆழ்ந்திருந்தனர். காரணம், அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது தான்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு தொடக்கம் முதலே தடுமாற்றம் இருந்தது. ருதுராஜ் 17 ரன்களுக்கும், கான்வே 30 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த பேட்டர்களும் வந்த வேகத்தில் திரும்பினர்.

வழக்கம்போல இம்பாக்ட் பிளேயர் அம்பத்தி ராயுடு எந்த இம்பாக்ட்டும் செய்யவில்லை. 100 ரன்களை எட்டவே கிட்ட தட்ட 15 ஓவர்கள் ஆன நிலையில், சற்றே ஆறுதலாக இருந்தது ஜடேஜா தூபேவின் பார்ட்னர்ஷிப்.

ஒரு பக்கம் சென்னை அணியின் ஸ்கோர் கவலைக்கிடமாக இருந்தாலும், மறுபக்கம் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயை எட்ட, ரசிகர்களோ “ We want Dhoni" என ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.

சொல்லிவைத்தாற்போல, கடைசி இரண்டு பந்துகள் இருந்தபோது ஜடேஜா தன் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தங்கள் அணியில் விக்கெட் விழுந்தால் எந்த அணி ரசிகர்களும் இப்படி ஆரவாரம் செய்யமாட்டார்கள், அது தோனியின் அணியாக இருக்கும் பட்சத்தில் என்று வர்ணனையாளர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்

களமிரங்கிய தோனி சிக்சர் ஃபோர் என்று விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதற்கு தான் டிரை செய்தார். ஆனால், வைபவ் அரோராவின் சிறப்பான பந்துவீச்சில், நோபாலில் போல்ட் ஆனார் தோனி. எதிர்கொண்ட இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது தோனிக்கு.

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் தொடக்க வீரர்கள், இம்பாக்ட் பிளேயர் கைக்கொடுக்கவில்லை.

ஆனால், பொறுப்பாக விளையாடிய கேப்டன் நிதிஷ் ரானா, மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், ஆளுக்கொரு அரைசதம் கடக்க, 18.3 ஓவர்களில் வெற்றிப்பெற்றது கொல்கத்தா அணி. இதன் மூலம் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது கே கே ஆர்.

போட்டி முடிந்து பேசிய தோனி, “டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்தை வீசும் போது தான் 180 ரன்கள் அடிக்கக்கூடிய களம் என்று உணரும் போட்டிகளில் ஒன்று இது.

ஆனால், முதல் இன்னிங்ஸில் களம் இருந்த நிலையில், நிச்சயமாக 180 ரன்கள் சேர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

இரண்டு இன்னிங்ஸையும் ஒப்பிடுகையில், முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் சற்றே அதிகமாக இருந்தது. அதுவே எங்களுக்கு சவாலாக அமைந்தது. எங்கள் அணி வீரர்கள் யாரையும் நான் குறைச் சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் பணியை சரியாகவே செய்தனர்.

களத்தின் நிலை தான் போட்டியின் போக்கை மாற்றிவிட்டது. பனி இருக்கும் என்று எதிர்பார்த்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தேன். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் டியூ இருக்கவில்லை. சில சமயங்களில் முடிவுகள் நாம் எதிர்பார்த்தபடி அமையாது.” என்று பேசியிருந்தார் தோனி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?