T20WC : "பென் ஸ்டோக்ஸ் தான் விருதுக்கு தகுதியானவர்" - சுட்டி குழந்தை சாம் கரன் உருக்கம் Twitter
ஸ்போர்ட்ஸ்

T20WC : "பென் ஸ்டோக்ஸ் தான் விருதுக்கு தகுதியானவர்" - சுட்டி குழந்தை சாம் கரன் உருக்கம்

Antony Ajay R

T20 உலகக் கோப்பை 2022 போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.

2010ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு கோப்பையை வென்றிருக்கிறது இங்கிலாந்து அணி. இதனால் வெற்றிக்கு பிறகு மிகவும் எமோஷனல் ஆகினர் இங்கிலாந்து வீரர்கள்.

2016ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பென்ஸ்டோக்ஸின் ஆட்டம் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. அது முதலே அவருக்கு எதிரான கருத்துகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் தன்னை நிரூபிக்க, விமர்சகர்களுக்கும் புல்லரிப்பை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு பக்கம் பென்ஸ்டோக்ஸ் பாராட்டுகளை பெற்றுவர, மறுபுறம் மாஸாக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவர் தொடர் நாயகன் விருதைப் பெறுவது இதுவே முதல்முறை. இந்த சாதனை செய்துவிட்டும் பணிவாக பேட்டிகளைக் கொடுத்தார் சாம் கரன்.

இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். குறிப்பாக இறுதிப் போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமேக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவரின் ஒரு பந்து கூட பவுண்டரி எல்லைகளைத் தொடவில்லை என்பது கூடுதல் தகவல்.

பெரும் சாதனைகளை புரிந்து விட்டு கூலாக பேட்டிக்கொடுக்க வந்த சுட்டிக்குழந்தை கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை விட பென் ஸ்டோக்ஸ் இதற்கு தகுதியானவர் எனக் கூறினார் சாம் கரன்.

"இந்த விருது எனக்கானது என்று நான் நினைக்கவில்லை. இந்த விருதுக்கு பென்ஸ்டோக்ஸ் தான் என்னை விடத் தகுதியானவர். அவருக்கு இது கிடைத்திருக்க வேண்டும். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவர் தான் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்" எனப் பேசினார்.

மேலும் கடந்த சீசன் ஐபிஎல்-ல் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் வரும் ஐபிஎல்-ல் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஐபிஎல்-ல் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடியது தனக்கு பெரிதும் உதவியதாகவும் கூறியுள்ளார் சாம்.

இந்த ஐபிஎல்-ல் சாம் கரனின் விலை தாறுமாறாக ஏறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?