ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை - சாப்பிட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி Twitter
தமிழ்நாடு

மதுரை : ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை - சாப்பிட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Priyadharshini R

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

தைப்பூச சிறப்பு தரிசனத்துக்காக மதுரையில் உள்ள டிவிஎஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள கோவலன் நகரில் உள்ள மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர்கள் அன்புச் செல்வம் ஜானகி தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் வந்துள்ளனர்.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். தைப்பூச தரிசனத்தினை முடித்து விட்டு கடைவீதியில் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு இருந்த ஐஸ் கிரீம் கடையை பார்த்து ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தம்பதியினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.

மூன்று குழந்தைகளும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட தொடங்கினர். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று இருந்துள்ளது.

உடனே குழந்தை பெற்றோரிடம் ஐஸ்கிரீமில் இருந்த தவளையைக் காட்ட, உடனே ஐஸ்கிரீமை கீழே போட்டு விட்டு, குழந்தைகள் மூவரையும் அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் குழந்தைகள் மூவரும் வாந்தி எடுக்கத் தொடங்கியதுடன் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மருத்துவமனையை அடைந்ததும், மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரின் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?