ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக்கூடாது என உத்தரவு!
ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக்கூடாது என உத்தரவு! Twitter
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு!

Priyadharshini R

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக்கூடாது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னை போயஸ் கார்டன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்பாக, தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள், ரத்தினக் கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் உள்பட 468 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் விட்டு அந்த பணத்தை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் நகை உட்பட அனைத்து பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என கூறி, நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?