ஜெயலலிதா முதல் பொன்முடி வரை:  ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?
ஜெயலலிதா முதல் பொன்முடி வரை: ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்? Twitter
தமிழ்நாடு

ஜெயலலிதா முதல் பொன்முடி வரை: ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த அரசியல்வாதிகள் யார்?

Priyadharshini R

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமான அளவு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கினார்.

அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஊழல் குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் அதிகாரிகள் உடனடியாக பதவி இழக்கும் நிலை உருவாகிவிட்டது. அந்த வகையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார் என்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

1991-1996 அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி, சுடுகாட்டு தகன மேடைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் ஊழல் செய்ததாக, இவர் மீது 1997ல் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், தனது எம்.பி பதவியை இழந்த செல்வகணபதி, தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. 1998ஆம் ஆண்டு தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ணா ரெட்டி என்றால், இந்தியாவில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் மாநிலம் ஜகன்னாபாத் தொகுதி எம்பியான ஜெகதீஷ் சர்மாவுக்கும் பதவி பறிக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?