வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி - குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டிய எம்.பி!
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி - குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டிய எம்.பி! Twitter
தமிழ்நாடு

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி - குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டிய எம்.பி!

Priyadharshini R

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு குடும்பத்தாரின் ஆசைப்படி கனிமொழி என பெயர் சூட்டினார் எம்.பி கனிமொழி

டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள் தூத்துக்குடி மட்டுமின்றி , திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் கனமழை பெய்தது.

இதனால் வெள்ளபெருக்கும் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் திருநெல்வேலியில் மட்டும் 91 பிரசவங்கள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளதாக மாவட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி வெள்ளத்தின் போது கர்ப்பிணி அபிஷா அங்கு சிக்கிக்கொண்டார். அவரை மீட்க, கனிமொழி தனது வாகனத்தை கர்ப்பிணி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவரை மீட்ட திமுகவினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையை கனிமொழி எம்பி நேரில் சென்று சந்தித்தார். பிறந்த பெண் குழந்தையை கனிமொழி கையில் வாங்கிக்கொண்டார். பின்னர் அந்த குழந்தையின் பெற்றோரின் விருப்பப்படி , பெண் குழந்தைக்கு தனது பெயரான கனிமொழி என்ற பெயரையே கனிமொழி சூட்டி மகிழ்ந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?