போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை! Twitter
தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Antony Ajay R

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டும், அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது தொழிற்சங்கம்.

இதனை முன்னிட்டு ஏற்கெனவே முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதனால் அரசுக்கு அதிக நிதி செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர் சிவசங்கர்.

தற்போது போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?