Children Twitter
Viral Corner

குடைக்குள் மழலை - பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்தும் வைரல் வீடியோ

Priyadharshini R

மழைபெய்து கொண்டிருக்கும் போது ஒரே குடையில் ஆறு பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளிப் பருவத்தின் போது, மழைக்காலத்தில் ஒரே குடையில் நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றிருப்போம். பாதி உடல் மழையில் நனைந்தாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதே தனி சுகம் தான்.

இந்த நிலையில் ஒரே குடையில் ஆறு பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Children

அதில் ஒரு சிறுவர் கையில் சிலேட்டை வைத்துள்ளார். மற்ற குழந்தைகள் குடையினை இறுக்கமாகப் பிடிக்க , மழைத் தூறலுக்கு மத்தியில் ஆனந்தமாக நடந்து செல்கின்றனர், இந்த வீடியோவினை IAS அதிகாரி அவனிஷ் ஷரன் டிவிட்டரில் ‘‘தோஸ்த்’’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

இந்த வீடியோவிற்கு டிவிட்டர் பயனாளர் ஒருவர், "90s கிட்ஸின் குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்துகிறது. மழைக்காலங்களில் சேறு நிறைந்த சாலையில் நண்பர்களுடன் செல்வோம். ஆனால் அப்போது எங்களிடம் செருப்பு இருக்காது" எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் குழந்தைப் பருவத்தை நினைத்து அசைபோடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?