பெர்முடா முக்கோணம்: கப்பல்கள் காணாமல் போனதற்கு இதான் காரணம் - விஞ்ஞானி சொல்வதென்ன? Twitter
உலகம்

பெர்முடா முக்கோணம்: "கப்பல்கள் காணாமல் போனதற்கு இதான் காரணம்" விஞ்ஞானி சொல்வதென்ன?

Priyadharshini R

நம் பூமிபகுதி எந்த அளவுக்கு அழகானதோ அதே போல் மர்மமானதும்கூட. அப்படி பல தசாப்தங்களாக மர்மமான பகுதியாக கருதப்படும் பெர்முடா முக்கோணம் குறித்த விளக்கம் இப்போது கிடைத்துள்ளது.

”பெர்முடா ட்ரையாங்கிள்” எனும் பகுதி அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில், அட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, புளோரிடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய மூன்று பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள முக்கோணப் பகுதியாகும்.

டெவில்ஸ் முக்கோணம் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியில் பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக இந்த மர்மம் தொடர்வதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பெர்முடா முக்கோணம் குறித்த புதிர்களை விடுவித்துள்ளார்.

விஞ்ஞானி க்ருசெல்னிக்கியின் கருத்தின் படி பெர்முடா பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்பட அங்கு உள்ள மோசமான வானிலைத்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவை விமானங்களை திசை மாற்றி மாயமாக்குவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல 1945 ஆம் ஆண்டு பிளைட் 19 என்ற விமானம் 14 பேருடன் காணாமல் போனது. இதனால் இந்த பகுதி திகிலான பகுதி என மக்கள் கூறிய வந்தனர்.

அதற்கான பதிலை க்ருசெல்னிக்கி கூறுகையில் பிளைட் 19 விமானி சார்லசிடம் மேற்கு நோக்கி செல்ல அறிவுப்பு கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் கிழக்கு நோக்கி சென்றார். இது போன்று பணியில் இருக்கும்போது விமானி சார்ல இரண்டு முறை விபத்து ஏற்படுத்தியிருக்கிறார் என்று க்ருசெல்னிக்கி கூறியிருக்கிறார்

கடந்த 2017 ஆம் ஆண்டு லாய்ட்ஸ் ஆப் லண்டன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படையின் தகவலின் படி பெர்முடா பகுதியில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 170 மைல் வேகத்தில் காற்று வீசி விமானங்களையும் கப்பல்களையும் சேதப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே அடலாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்தில் ஏற்பட்ட விபத்துக்கு எந்த எலியனும் சாத்தானும் காரணமில்லை மனித பிழைகளே இதற்கு காரணம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி கூறுகிறார்.

சரி அப்படி பெர்முடா முக்கோண பகுதியில் விபத்தில் சிக்கும் விமானங்களும் கப்பல்களும் மூழ்கினால் கடலின் அந்த பகுதியில் விபத்துக்குள்ளான விமானங்கள் ஏன் இருப்பதில்லை என்ற கேள்வியினை பலரும் முன்வைத்தனர். விஞ்ஞானிகள் இதற்கான பதிலையும் கூறியுள்ளனர்

இது குறித்து பிபிசி தனது கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளது. அதில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் த கல்ஃப் ஸ்ட்ரீம் எனும் பெரும் கடல் நீரோட்டம் கடலின் அடியில் ஆறு போல் செல்வதால் கப்பலின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் காணாமல் போன இடத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என கூறியுள்ளது.

நீங்கள் இந்த தொகுப்பை படிக்கும் இந்த நேரத்திலும் ஏதாவது ஒரு கப்பலோ விமானமோ பெர்முடா பகுதியை மிக பத்திரமாக கடந்து செல்லும். ஆனால் இன்று வரை பெர்முடா முக்கோணம் பற்றிய கட்டுக்கதைகள் தொடந்து கொண்டேதான் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?