Iphone Canva
உலகம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.160 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் - ஏன்?

Keerthanaa R

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.160 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரேசில் நீதிமன்றம். மேலும் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களுக்கு சார்ஜர் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களில் மக்களால் முதன்மையாக கருதப்படுவது ஐஃபோன். அதன் வடிவம், அதன் ஃபீச்சர்கள், ஏன் அதன் விலையினால் கூட அது பணக்காரர்களின் அடையாளமாக பார்க்கப்டுகிறது.

Iphone

ஐஃபோன்களின் சீரீஸ் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனுடன் கொடுக்கப்படும் அக்ஸசரீஸ் குறைக்கப்பட்டன.

முதலில் இயர்ஃபோன்ஸ் பின்னர் சார்ஜர் என நிறுவனம் அலைப்பேசியுடன் கொடுப்பதை நிறுத்தியது. இயர்ஃபோன், சார்ஜரின் அடாப்டர் போன்ற சாதனங்களை இணைக்காமல், ஃபோன்களை மட்டும் கொடுப்பதால், ஐஃபோன்கள் ஷிப்பிங் செய்வதற்கு எளிதாக இருக்கிறது என்று நிறுவனம் தெரிவித்தது. மேலும் இதனால் ஈ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு முதல் சந்தைக்கு வந்த ஐஃபோன் XR,11,12, அதன் பிறகு வரும் ஐஃபோன்களுக்கு அடாப்டர் மற்றும் இயர் பட்/இயர்ஃபோன் இல்லை. இந்த சீரிஸ் ஃபோன்களுடன் சார்ஜிங் கேபிள் மட்டும் கிடைக்கும். மேலும், இவ்வாறு அடாப்டர் இல்லாமல் ஃபோன் மட்டுமே விற்று வந்ததால், 6 பில்லியன் டாலருக்கு மேல் நிறுவனம் பணம் சேமித்ததாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஒரு நீதிமன்றம், ஐஃபோன் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர், கிட்டதட்ட 160 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. விற்கப்படும் ஐஃபோனுடன் சார்ஜரையும் இணைத்து வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஏ எஃப் பி-ன் தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இப்படி சார்ஜர் வழங்காமல், அதை தனியாக பணம் கொடுத்து வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது வாடிக்கையாளர்களை துஷ்பிரயோகம் செய்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நீதித்துறை அமைச்சகம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது இதே குற்றத்திற்காக அபராதம் விதித்திருந்தது. அப்போது நிறுவனத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. மேலும் சார்ஜர் இல்லாமல் ஐஃபோன் 12 மற்றும் 13 மாடல்களை சார்ஜர் இல்லாமல் விற்க தடையும் விதித்திருந்தது.

பிரேசிலிய நுகர்வோர் சங்கம் தாக்கல் செய்த ஒரு வழக்குக்கு பதிலளிக்கும் விதமாக, சிவில் நீதிமன்ற நீதிபதி ஒருவர் 100 மில்லியன் ரெய்ஸ் (சுமார் 20 மில்லியன் டாலர்கள்) இழப்பீடாக புதிய அபராதங்களை விதித்தார். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக பிரேசிலில் ஐஃபோன் 12 மற்றும் 13 ஃபோன்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சார்ஜர் வழங்குமாறும், வருங்காலத்தில் புதிய ஐஃபோன் வாங்குபவர்களுக்கும் சார்ஜர் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?