குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 'ஆண்மை நீக்க' தண்டனை அறிவிப்பு!
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 'ஆண்மை நீக்க' தண்டனை அறிவிப்பு! Twitter
உலகம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 'ஆண்மை நீக்க' தண்டனை அறிவிப்பு!

Antony Ajay R

குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் பிப்ரவரி 2 ம் தேதி நிறைவேற்றப்பட்டு உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும், 10 -13 வயது குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை (அ) ரசாயன முறையிலும், 14-17 வயது குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு ரசாயன முறையிலும் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு பல சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கினாலும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இது இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக எதிர்த்து வருகின்றனர்.

மடகாஸ்கரில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நாட்டில் 2023ம் ஆண்டு 600 குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2024 ஜனவரியில் மட்டும் 133 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?