நடு ரோட்டில் யூடியூபர்  ட்விட்டர்
உலகம்

Likes-க்காக நடு ரோட்டில் யூடியூபர் செய்த காரியம்; கைது செய்த போலீஸ்

Keerthanaa R

தனது சமூக வலைத்தளத்தில் வ்லோக் பதிவிடுவதற்காக நடு ரோட்டில் படுத்தவரை கைது செய்துள்ளது துபாய் போலீஸ்.

இன்ஃப்ளூயன்சர் மோகம் இளசு முதல் பெருசு வரை அனைவரையும் ஆக்கிரமத்துள்ளது. காட்டுக்கு தீயிட்டு வீடியோ பதிவிடுவது, ஆபத்தான மலைகளின் மேல் நிற்பது, ஓடும் வண்டியிலிருந்து குதிப்பது என எல்லைகள் கடந்து தங்கள் சேனலுக்காக உயிரை பணையம் வைக்கிறார்கள்.

அந்த வகையில், துபாயில் ஒரு வி லோக்கர் வாகனங்கள் நிறைந்த சாலையில் தலையணை வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் சாலையில் படுத்திருப்பதை கவனித்தவுடன், கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் சில அடி தூரங்களிலேயே நின்றுவிட்டன. இதனால் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அங்கு வந்து அவரை கைது செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காகவும், அவரது மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாலும் அவரை கைது செய்ததாக துபாய் காவல் துறை டிவிட்டரில் தெரிவித்திருந்தது.

பலரும் காவல் துறையின் துரித நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். மேலும் இதனால் தான் துபாய் பாதுகாப்பான, அமைதியான நாடுகளில் ஒன்று எனவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?