உக்ரைன்: 10 மணி நேரம் ரயில்; செல்போன்கள் இல்லை- ஜோ பைடன் ரகசிய பயணம் ரஷ்யாவுக்கு தெரியுமா? Twitter
உலகம்

உக்ரைன்: ரயிலில் 10 மணி நேரம், செல்போன் இல்லை - ஜோ பைடன் ரகசிய பயணம் ரஷ்யாவுக்கு தெரியுமா?

Antony Ajay R

கடந்த திங்கள் அன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியை சந்தித்தார்.

இந்த நிகழ்வு மிகவும் துணிச்சலானதாக கருதப்படுகிறது.

அதுவும் இது போல போர் நடைபெறும் சூழலில் ஒரு குடியரசுத் தலைவர் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் இடத்துக்கு செல்வது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை கீவ் நகரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக இருந்தவர்களும் ஈராக், ஆப்கானிஸ்தானில் போர் நடைபெறும் போது அந்தந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் பைடன் மிகச் சிறிய குழு உடனே தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முன்பே கணிக்கப்பட்டதா?

திங்கள் அன்று போலந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார் அதிபர் பைடன்.

ஆனால் இரண்டு நாட்கள் பயணமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவர் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறாட் என்ற பட்டியலில் வெற்றிடம் நிலவியது.

இதனால் பத்திரிகைகள் முன்னதாவே அதிபர் உக்ரைன் செல்வதாக கணித்தன. என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், போலந்தை தவிர வேறு திட்டங்கள் எல்லை என்றே கூறியது வெள்ளை மாளிகை.

யார் யார் உடன் சென்றனர்?

உக்ரைன் தலைநகருக்கு செல்வது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வந்த விஷயம்.

பைடனுடன் இரண்டு பத்திரிகையாளர்கள் ( ரகசியமாக ), மருத்துவ குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர்.

உடன் சென்றவர்களின் மொபைல் போன்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. பைடன் கீவ் நகரில் இறங்கிய பின்பு தான் போன்கள் திருப்பி வழங்கப்பட்டன.

பைடன் பாதுகாப்பாக உக்ரைனை அடைந்த பின்னர் தான் அந்த பயணம் குறித்த செய்திகள் முதன்முதலாக கூறப்பட்டன.

மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், "தாக்குதல் நடைபெறுவதை தடுப்பதற்கான நோக்கத்தில் எங்களின் செய்தி ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது எத்தகைய செய்தி, அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதை விளக்க இயலாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏன் கீவை தேர்ந்தெடுத்தார்?

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி சில நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்கா வந்து மாநாட்டில் கலந்துகொண்டார்.

எனவே உக்ரைனுக்கு ஜோ பைடன் செல்வதை விட செலன்ஸ்கியை சந்திக்க அவருக்கு பல வழிகள் இருக்கின்றன.

என்றாலும் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதில் எத்தனை உறுதியாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்காக ஜோ பைடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் 10 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்கின்றனர்.

பைடன் உக்ரைன் குறித்துப் பேசியது என்ன?

"யுக்ரேனியர்களை மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன். சாதாரண மற்றும் கடின உழைப்பாளியாக அவர்கள் திகழ்கிறார்கள்.

ஒருபோதும் ராணுவ பயிற்சி பெறவில்லை. ஆனாலும் களத்தில் அவர்கள் முன்னோக்கிச் சென்று போராடிய விதம் சிறந்த வீரத்திற்கு குறைவானது அல்ல.

இப்போது உலகம் முழுவதும் அவர்களை அறிந்துள்ளது," என வியந்து பேசினார் பைடன்.

பின்னர், அமெரிக்கா 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் என்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்போம் என்றும் அறிவிப்புகளை விடுத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?