கார்த்திக் வாசுதேவ் twitter
உலகம்

கனடா : இந்திய மாணவர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

Priyadharshini R

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ். இவர் கனடா டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு மேலாண்மைத்துறை படித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கார்த்திக் வாசுதேவ்

கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் 5 அடி முதல் 7 அங்குல உயரம் கொண்ட ஒரு கறுப்பின ஆணாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர் கடைசியாக ஒரு கைத்துப்பாக்கியை ஏந்தியபடி தெற்கே க்ளென் சாலையில் நடந்து கொண்டிருந்ததாக ஒரு செய்தி சேனல் தகவல் தெரிவிக்கிறது.

Subway Station In Canada

கார்த்திக் வாசுதேவ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கார்த்திக்கின் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?