சிங்கம் Twitter
உலகம்

கென்யா : வீட்டு தோட்டத்தில் மறைந்திருந்த சிங்கம் - நடந்தது என்ன?

Antony Ajay R

நீங்கள் வீட்டிலிருந்து சோம்பல் முறித்தவாறு உங்கள் தோட்டத்துக்குச் செல்கிறீர்கள். அப்போது தோட்டத்தின் புதர் வேலிக்கு இடையில் ஒரு பயந்து போய் ஒழிந்திருக்கும் சிங்கத்தினை பார்த்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

அப்படி ஒரு சம்பவம் தான் கென்யாவில் நடைபெற்றது. கென்யா நாட்டில் கியாங்குவா பகுதியில் ஒருவர் தன் வீட்டு தோட்டத்தில் சிங்கத்தைப் பார்த்திருக்கிறார். அது கொஞ்சம் பயந்தவாறு பதுங்கி அமர்ந்திருந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் சிங்கமல்லவா? அலறிய அந்த நபர் அவசர அவசரமாக வனத்துறையினருக்கு போன் செய்திருக்கிறார்.

இதன் பிறகு இந்த சம்பவம் மொத்தமும் நகைச்சுவையாக மாறிப்போனது.

மக்கள் குடியிருக்கும் பகுதியில் நுழைந்த சிங்கத்தினை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் விரைவாகப் புறப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் சிங்கத்தை நேருக்கு நேராக எதிர்கொண்ட போது தான் தெரிந்திருக்கிறது அது ஒரிஜினல் சிங்கமல்ல சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்ட பை என்று.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சிரிப்பலையால் நிரம்பியிருக்கிறது. இதனைக் கென்யா வனத்துறையினர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் சிங்கம் இல்லாவிடிலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க தகவல் கொடுத்தவர்களை பாராட்டியுள்ளனர்.

இந்த ட்விட்டை காமடி ஆஃப் தி இயராக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?