பிறக்கும் முன் இறந்தவர்களுக்கு விநோத சடங்கு - எங்கே? என்ன காரணம்? ட்விட்டர்
உலகம்

பிறக்கும் முன்னரே இறக்கும் குழந்தைகள்; பெற்றோர் செய்யும் விநோத சடங்கு- எங்கே? என்ன காரணம்?

Keerthanaa R

பிறந்து இறந்தவர்களை நினைவுக்கூரும் விதமாக உலகெங்கிலும் பல வித்தியாசமான சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் பிறக்காமலேயே இறந்துபோகிறவர்களுக்கு என்று ஒரு சடங்கு பின்பற்றப்படுகிறது என்பதை அறிவீர்களா?

ஜப்பானில், பிறக்கும் முன்னரே இறந்தவர்களுக்காக துக்கம் அனுசரிக்கும் விநோத சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

புத்த பாரம்பரிய சடங்கான இந்த வழக்கத்தில், கருச்சிதைவு, இறந்து பிறக்கும் குழந்தைகள், மனமுவந்து கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தாலும், அக்குழந்தைகளின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும்.

மிஜோகோ குயோ

ஜப்பானின் கோவில்களில், வீடுகளிலும் பின்பற்றப்படும் இந்த சடங்கின் பெயர் மிஜோகோ குயோ. “நீர் குழந்தை நினைவு சேவை” என ஜப்பானிய மொழியில் இது பொருள்படுகிறது.

தாயின் கருவில் இருக்கும்போது ஒரு குழந்தை பனிக்குடத்திற்குள் வாழ்கிறது. இதன் காரணமாகவே இந்த பெயர் வந்தது எனக் கூறப்படுகிறது.

சொர்க்கம்

ஜப்பானிய புத்த மதத்தில், கருவில் இறக்கும் குழந்தை சொர்க்கத்தை அடைவதில்லை என்ற ஒரு கூற்று இருக்கிறது.

காரணம், பூமியில் பிறந்து, நற்செயல்கள் எதுவும் செய்ய குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்துக்கு செல்லமாட்டார்கள் என நம்பப்படுகிறது.

முகம் கூட தெரியாத இறந்த தங்கள் குழந்தைகள் சங்கடங்கள் எதையும் அனுபவிக்காமல், சொர்க்கத்தை அடையவேண்டும், அந்த உலகில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு.

சாய் நோ கவாரா

புராண நதியான சன்ஸு நதிக்கரையில் அமைந்திருக்கிறது சாய் நோ கவாரா என்ற இந்த இடம். கருவில் மரணிக்கும் குழந்தைகள் இந்த சாய் நோ கவாராவுக்கு செல்வதாக நம்பப்படுகிறது.

அங்கு அந்த குழந்தைகளின் ஆன்மாக்கள் கற்களை கோபுரங்களாக அடுக்குகின்றனர். இந்த கோபுரம் அடுக்குவதற்கு முடிவே கிடையாது. ஓயாமல் அடுக்கிக்கொண்டே இருக்கவேண்டும். தங்கள் பெற்றோருக்கு அளித்த கஷ்டத்திற்காக குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு தண்டனை இது.

ஜிஜோ கடவுள்

சாய் நோ கவாராவில் இருக்கும் குழந்தைகளை காக்கும் கடவுள் தான் இந்த ஜிஜோ. கல் கோபுரங்களை அடுக்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து, தனது ஆடைக்குள் பதுக்கி தூக்கிச்சென்று சொர்க்கத்தில் விட்டுவிடுவார் ஜிஜோ.

ஜப்பான் கோவில்கள், கல்லறைகள் மற்றும் தெருவோரக்கடைகளில் ஜிஜோ சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளை இழந்த பெற்றோர் இந்த ஜிஜோ சிலைக்கு பூஜைகள் செய்கின்றனர்.

தவிர, ஜிஜோ சிலைக்கு அருகில் பொம்மைகள், மிட்டாய்கள் போன்ற காணிக்கைகள் செலுத்துகின்றனர். ஜிஜோ சிலைகளுக்கு அருகில் கல் கோபுரங்களையும் பெற்றோர் அடுக்குகின்றனர்.

இந்த ஜிஜோ சிலைக்கு சிவப்பு நிற ஆடை மற்றும் சிவப்பு நிற தொப்பியை அணிவிக்கின்றனர். அப்படி செய்தால், சீக்கிரமாக தங்கள் குழந்தைகளை ஜிஜோ சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்வார்கள் என்பது அவர்களின் ஏக்கமாக இருக்கிறது.

1970ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்த சடங்கு வெளியுலகிற்கு பிரபலமானது. சிலர் இந்த சடங்கு உண்மையில் புத்தமதத்தில் இல்லை எனவும், வணிகமயமாக்கும் ஒரு முயற்சி எனவும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இந்த சடங்கு பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?