இரவு 8 மணிக்கு மேல் தம்பதிகள் குழந்தை பெற முயற்சிக்கக்கூடாது என்ற விநோத அறிவிப்பை விடுத்துள்ளார் பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப்
இலங்கை, லெபனன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அரசியல் நிலையற்ற தன்மை, ஆட்சி மாற்றம் நாட்டில் பல பிரச்னைகளை தூண்டிவிட்டிருக்கிறது.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு விநோதமான காரணம் ஒன்றை முன்வைத்திருக்கிறார் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப்.
இவர் பேசிய வீடியோ ஒன்றை, பத்திரிகை நிருபரான நைலா இனாயத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில்,
“8 மணிக்கு மேல்எந்த நாடுகளில் எல்லாம் சந்தைகள் மூடப்படுகிறதோ, அந்நாடுகளில் எல்லாம் மக்கள் தொகை அதிகரிப்பு குறைவாகவே இருக்கிறது. புதிய ஆராய்ச்சியின்படி, இரவு 8 மணிக்கு மேல் குழந்தை பெற முயற்சிக்கக் கூடாது” என்று அவர் பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, படு வைரலாகி வருகிரது.
பலரும் அமைச்சரின் இந்த கருத்து அர்த்தமற்றதாக இருக்கிறது என்று கூறி கேலி செய்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust