இலங்கை: ராஜபக்சே சகோதரர்கள் போர் குற்றவாளிகள் - தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் NewsSense
உலகம்

இலங்கை: ராஜபக்சே சகோதரர்கள் போர் குற்றவாளிகள் - தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள்

NewsSense Editorial Team

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென் இலங்கை மக்களின் போராட்டங்களில் 'போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

ராஜபக்சே

என்ன நடக்கிறது அங்கே?

அந்நிய செலாவணி, கடன் போன்ற பல சிக்கல்களால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டணியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நேற்று விலகினர்.

ஆனாலும் அங்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இப்படியான சூழலில் ராஜபக்சே சகோதரர்களை போர் குற்றவாளிகள் என்று கூறி சிலர் பதாகைகளை ஏந்தி உள்ளனர்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச அறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், 'ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்பதோடு 'போர்குற்றவாளிகள்' என இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

இப்படியான சூழலில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் :

'தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்' என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை 'இனப்படுகொலையாளிகளாக' (DIRTY DOZEN - Genocidaires and War Criminals on Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?