அப்பா - மகன் Canva
Wow News

7G முதல் டான் வரை : அப்பாவை நேசிக்கிறீங்களா? - இந்த 10 விஷயத்தை கண்டிப்பா கேளுங்கள்!

NewsSense Editorial Team

`தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!' - ஒவ்வொரு மகனுக்கும் இந்த வரியின் ஆழம் புரியும். தந்தையின் அன்பு எப்போதும் வெளிப்படுத்த முடியாத தன்மையிலேயே இருக்கிறது. அதேபோலத்தான் அப்பா - மகன் உறவும், எப்போதும் வெளிப்படையாகக் கண்களைப் பார்த்து அப்பாவிடம் மகன்களால் உரையாட முடிவதில்லை. அப்பாக்கள் வேலைக்குச் செல்லும்போது மகன்களிடம் பேச அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அப்பாக்கள் பேச நினைக்கிற வயதில் மகன்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். நாம் நம் அப்பாக்களிடம் பல கேள்விகளைக் கேட்க நினைத்திருப்போம். பல விஷயங்கள் குறித்து அவரிடம் விவாதிக்க நினைத்திருப்போம். ஆனால், பலருக்கு அதற்கான சூழல் அமையாமலே போயிருக்கும். ஒரு நண்பரைப் போல, ஆசிரியரைப் போலத் தந்தையிடம் நாம் பேசவேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனாலும், தந்தை - மகன் உறவில் ஒரு சிறிய திரை இருக்கும் அதை உடைத்து சில கேள்விகளைக் கேட்கவேண்டும். ஆம், உங்கள் மனதில், நம் மனதில் நம் தந்தைகளிடம் கேட்கக்கூடிய கேள்விகள் சில உள்ளன. அவை நிச்சயம் கேட்கப்பட வேண்டும்.

அப்பா - மகன்

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறீர்கள்?

2. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தொழிலை ஏன் தேர்வு செய்தீர்கள்?

3. உங்கள் வாழ்க்கையில் யார் உங்களுக்கு முக்கியமான நபர்?

4. உங்கள் தந்தையிடம் நீங்கள் பார்த்து வியந்த, பின்பற்றிய விஷயம் என்ன?

5. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்ன?

அப்பா - மகன்

6. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இதைச் செய்யவில்லையே என்று எதற்காவது வருந்தியிருக்கிறீர்களா?

7. உங்கள் தந்தை உங்களைப் பற்றிக் கேட்டால் எப்படி விவரிப்பார்?

8. எந்தத் தவறு வாழ்க்கையில் உங்களுக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கற்றுக்கொடுத்தது?

9. உலகில் நடந்த எந்த ஒரு நிகழ்வு உங்களை மிகவும் பாதித்தது?

10. நீங்கள் தந்தையாக இருப்பதற்காகப் பெருமைப்பட்ட தருணம் எது?

இந்த 10 கேள்விகள்தான் நீங்கள் தந்தையிடம் நிச்சயம் கேட்கவேண்டியவை. ஒரு மகனாக, தந்தையாக அப்பாக்கள் கண்டடைந்திருப்பது அதிகம். இந்த உலகத்தைப் பற்றி உறவுகளைப் பற்றிய அப்பாக்களின் புரிதல் நமக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் இருள் காக்கும் ஒளி தேவை. அந்த தீராத ஒளி நம் தந்தையின் சொற்களில் நமக்குக் கிடைக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?