இந்தியாவில் ஐடி துறை வளர 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறு

2000 ஆம் ஆண்டு உலகின் எல்லா கம்பியூடர்களிலும் சாஃப்ட்வேர் குழப்பம் ஏற்பட்டு, வங்கி கணக்குகளை அழிக்கலாம், கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாமல் போகலாம், பாதுகாப்புத் துறையில் பிரச்னை ஏற்படலாம் என அஞ்சினர்.
இந்தியாவில் ஐடி துறை வளர் ஒரு 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறு
இந்தியாவில் ஐடி துறை வளர் ஒரு 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறுTwitter
Published on

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு பொருளாதார பலமாக இருப்பது ஐடி நிறுவனங்கள்.

என்னதான் 1960களில் கம்பியூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் 2000த்துக்கு பிறகு தான் பெரிய அளவில் ஐடி துறை வளர்ச்சியடையத் தொடங்கியது.

இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சியை முடுக்கிவிட்ட Y2K Bug பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கணினி கண்டுபிடிக்கப்பட்டது முதல் அதில் தேதியை DD/MM/YY என்று தான் குறிப்பிட்டு வந்தனார். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் அதிக ஸ்டோரேஜ் தேவைப்பட்டதும், ஸ்டோரேஜ் விலை அதிகம் என்பதும் ( 1 கிலோபைட் கிட்டத்தட்ட 100 டாலர்கள் ) இதற்கு காரணம்.

1990கள் வரை இப்படி தேதியைக் குறிப்பிடுவது சாதாரணமானதாக இருந்தது. பாதுகாப்புத் துறை கணினிகள் முதல் டோஸ்டர்கள் வரை எல்லா கணினி பயன்பாட்டிலும் ஆண்டின் கடைசி 2 எண்கள் தான் குறிப்பிடப்பட்டு வந்தன.

1993ம் ஆண்டு கம்பியூட்டர் வோர்ல்ட் என்ற இதழ் டூம்ஸ்டே 2000 என்ற பெயரில் Y2K பிரச்னையை எழுப்பியது.

2000ம் ஆண்டு ஆரம்பமாகும் போது, மீண்டும் தேதிகளில் ஆண்டு 00 எனக் குறிப்பிடப்படும். இது அதற்கு முந்தைய ஆண்டுகளான 99,98,97,96 எல்லாவற்றையும் விட சிறிய எண்ணாக கணினியால் எடுத்துக்கொள்ளப்படலாம்.

இதனால் சாஃப்ட்வேர் எரர் ஏற்பட்டு, தரவு இழப்பு போன்ற பிரச்னைகள் உருவாகலாம். இது வங்கி கணக்குகளை அழிக்கலாம், கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாமல் போகலாம், பாதுகாப்புத் துறையில் பிரச்னை ஏற்படலாம் என எண்ணினர்.

இந்த பிரச்னையை மில்லியனியம் பிரச்னை என்றும் அழைத்தனர். இதனை சரி செய்ய ஒவ்வொரு கம்பியூட்டரிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். 7 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள அரசுகள், நிறுவனங்களின் ஒப்புதல்களைப் பெற்று பலரை புதிதாக வேலைக்கு அமர்த்தி இதனை சரிசெய்தன கம்பியூட்டர் நிறுவனங்கள்.

ரஷ்யா போன்ற நாடுகள் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் எண்ணியது போலவே எந்த பிரச்னையும் எழவில்லை.

இந்தியாவில் ஐடி துறை வளர் ஒரு 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறு
எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

அமெரிக்காவோ இதனை உலகம் முழுவதும் சரி செய்வதற்காக பல இஞ்சினியர்களை வேலைக்கு எடுத்தது. இதனால் இந்தியா போன்ற நாடுகள் பெரிய அளவில் நன்மை அடைந்தன.

அமெரிக்க நிறுவனங்களுக்காக பிபிஓக்கள் திறக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து சரியான ஊதியத்தில் பணியாற்ற தரமான இஞ்சினியர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர்.

இந்தியாவில் ஐடி துறை வளர் ஒரு 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறு
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?



இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்தியாவின் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஐடி தளத்தை வலுப்படுத்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற ஐடி மையங்கள் வளர்ச்சியடைந்தன.

இந்தியாவில் அந்த நேரத்தில் ஐடி துறை அடைந்த வளர்ச்சியை ஜிடிபி வழியாக கண்கூடாக பார்க்க முடியும்.
1998ல் இந்தியாவில் ஐடி துறை ஜிடிபி பங்களிப்பு 1.2% 2020ல் 7.7%.

இந்தியாவில் ஐடி துறை வளர் ஒரு 'Y2K Bug' தான் காரணமா? - ஒரு சுவாரஸ்ய வரலாறு
Moonlighting Policy: இந்திய ஐடி துறையில் வரும் மாற்றம்? எதிர்க்கும் Wipro Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com