"மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு"- வடிவேலு ஏன் இப்படி சொல்கிறார்?

இயக்குநர் மாரி செல்வராஜ் மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் ஈடுப்பட்டதை சிலர் அரசியல் ரீதியாக விமர்சித்திருந்தனர். அதற்கு அவரும் பதிலடி கொடுத்திருந்தார்.
"மாரி செல்வராஜ் என்ன  அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு"- வடிவேலு ஏன் இப்படி சொல்கிறார்?
"மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு"- வடிவேலு ஏன் இப்படி சொல்கிறார்?Twitter

தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிக்காக களத்தில் செயல்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு.

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வெள்ளம் பெருகெடுத்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஈடுபட்டார்.

இது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது x பக்கத்தில் ‘கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் . வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்’ என்று பதிவிட்டிருந்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் ஈடுப்பட்டதை சிலர் அரசியல் ரீதியாக விமர்சித்திருந்தனர். அதற்கு அவரும் “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

"மாரி செல்வராஜ் என்ன  அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு"- வடிவேலு ஏன் இப்படி சொல்கிறார்?
மாமன்னன் தனபால்: வடிவேலு பாத்திரத்தின் நிஜக்கதை தெரியுமா?

இதனையடுத்து மாரி செல்வராஜுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு குரல் கொடுத்துள்ளார்.

’அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்குள்ளது என அவருக்குத்தான் தெரியும். ஏன் போகக்கூடாதா..? அவர் ஊரில் அவரு போகாம, வேற யாரு போறது? அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு" என இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு.

"மாரி செல்வராஜ் என்ன  அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு"- வடிவேலு ஏன் இப்படி சொல்கிறார்?
”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் சுகுமார் பகிர்ந்த பகீர் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com