Ar Rahman : உண்மையான பெயர் திலீப் குமாரா? ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவரது ஆத்மார்த்தமான இசைக்காக அறியப்படுகிறார் ஏஆர் ரஹ்மான்.
அவரது தனித்துவமான திறமைக்கு அங்கீகாரமாக ஏராளமான சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவரது பிறந்தநாளில், ரஹ்மானைப் பற்றிய பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.
இயற்பெயர் திலீப் குமார்
அவரின் இயற்பெயர் ஏ ஆர் ரஹ்மான் இல்லை. இந்துக் குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார்.
23 வயதில், மதம் மாறி இஸ்லாத்தைத் தழுவும் முடிவை எடுத்தார். அவர் தனது ஆன்மீக குருவான சூஃபி துறவி காத்ரி இஸ்லாமைச் சந்தித்த உடனேயே இந்த மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டது.
இசை ஒரு தொழிலாக மாறியது
ஏ.ஆர்.ரஹ்மான் இசையை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக ரஹ்மானின் தந்தை ஆர் கே சேகர் மலையாள திரை உலகில் மூத்த இசையமைப்பாளராவார்.
தனது 9 வயதில் தந்தை மரணம் அடைந்த பிறகு இசைக்கருவிகளை வாடகைக்கு எடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தியது ரஹ்மான் குடும்பம்.
25 வயது வரை தற்கொலை எண்ணங்கள்
ரஹ்மானின் சுயசரிதை notes of a dream என்ற பேரில் புத்தகமாக உள்ளது.
அந்நூலில் தன் இளமைக்கால வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருந்தது என்றும் தந்தையின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கை வெறுமையாகியது எனவும் 25 வயது வரை தனக்குள் தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரஹ்மான்
உதவியாளர் டு இசையமைப்பாளர்
ஆரம்ப காலங்களில் மூத்த இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் விளம்பர படங்களுக்கு டியூன் போட்டுக் கொடுத்தார் ரஹ்மான்.
அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
சீன மொழி படங்களுக்கும் இசை
தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான்
ஆஸ்கர் விருது
ஸ்லம்டாக் மில்லியினர் திரைப்படத்திற்காக உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
6 தேசிய விருதுகள்
ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல் இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும்.
ஆறு தேசிய விருதுகள், 32 பிலிம்ஃபார் விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளை இசையமைப்பாளர் பெற்றுள்ளார்.
வெள்ளித் திறையில் முதலில் முகம் காட்டியது பிகில் படத்தில் தான்
திரையுலகில் 27 வருடங்களுக்கு மேலாக இசையமைப்பாளராக வலம் வந்தாலும் ரஹ்மான் முதல் முதலாக வெள்ளித்திறையில் முகம் காட்டியது பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலில் தான்.
இரவில் இசை
பொதுவாக இரவு நேரத்தில் தான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராம். அதற்கு காரணம், அமைதியான சூழல் இரவு நேரங்களில் கிடைப்பதால் அந்த நேரத்தை தேர்வு செய்வதாக தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust