AR Rahman : இசை நிகழ்ச்சி ரத்து; 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரஹ்மான் நோட்டீஸ் - என்ன நடந்தது?

ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 AR Rahman
AR RahmanTwitter

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்தானது.

இந்நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ. 29.50 லட்சத்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் திரும்ப கேட்டது.

ரஹ்மான் வழங்கிய முன் தேதியிட்ட காசோலையானது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ரஹ்மான் தரப்பில் இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார்.

அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 AR Rahman
AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான்; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Video

அதுமட்டுமில்லாமல் தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீஸை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்டு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் இருக்கும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியத்தற்காக இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 AR Rahman
ராவடி பாடலை ட்ரோல் செய்த விக்கல்ஸ் குழு - பதிலுக்கு ரஹ்மான் செய்த சம்பவம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com