AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான்; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Video

ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மேடையேறி பாடுவதை நிறுத்துமாறு கூறினார். மேலும் இசைக்கலைஞர்களையும் வாசிப்பதை நிறுத்துமாறு சொல்பவர், கைக் கடிகாரத்தை காண்பிக்கிறார்.
AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Viral Video
AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Viral VideoTwitter

பூனேவில் நடந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் கான்சர்ட்டில் ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையேறி காவலர் ஒருவர் அவரை பாடவிடாமல் தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர்கள் வெவ்வேறு நாடுகளுக்கும், இந்திய மாநிலங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த கான்சர்ட்டுகள் மூலமாக, பல மறந்துபோன பாடல்களும் மீண்டும் கொண்டுவரப்பட்டு இசை ரசிப்பவர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு ஒரு கம் பேக்காகவும் இருக்கிறது.

தவிர பல இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் இந்த கான்சர்ட்டுகள் மாற்ற உதவியுள்ளன. இந்த மாதிரியான கான்சர்ட்டுகளுக்கு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் பூனேவில் இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் கான்சர்ட் நடந்தது

AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Viral Video
AR Rahman : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்

அப்போது ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மேடையேறி பாடுவதை நிறுத்துமாறு கூறினார். மேலும் இசைக்கலைஞர்களையும் வாசிப்பதை நிறுத்துமாறு சொல்பவர், கைக் கடிகாரத்தை காண்பிக்கிறார்.

புரிந்துகொண்ட ரஹ்மானும் பாடுவதை அப்படியே நிறுத்திவிட்டு, ரசிகர்களிடம் நன்றி கூறி விடை பெற தயாரானார். காவலர் மேடையேறி வரும்போது ரஹ்மான் உயிரே (தில் சே) படத்தில் இடம்பெற்ற தைய்யா தைய்யா (இந்தியில் சைய்யா சைய்யா) பாடலை பாடிக்கொண்டிருந்தார்.

அவர் பாடுவதை நிறுத்தியும் ரசிகர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தனர்

AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Viral Video
"தமிழ் தான் இணைப்பு மொழி" அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது, பலரும் பூனே போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது என்றனர்.

இது குறித்து பின்னர் விளக்கமளிக்கப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்திற்கு மேலாக (இரவு 10 மணிக்கு) நிகழ்ச்சி நடந்ததால் தடுத்து நிறுத்தப்படாதாக பூனேவின் டிசிபி சமர்தனா பாட்டில் கூறியதை ஏ என் ஐ தளம் மேற்கோள்காட்டியது.

ரஹ்மானும் தனது கடைசி பாடலையே பாடிக்கொண்டிருந்தார் எனவும், ஆனால் நேரத்தை அவர் கவனிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் மனைவியை ரஹ்மான் தமிழில் பேசச்சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

AR Rahman: மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான; தடுத்து நிறுத்திய காவலர்- ஏன்? | Viral Video
AR Rahman: ”இந்தி வேண்டாம் தமிழில் பேசுங்க” மேடையில் மனைவியை செல்லமாக அதட்டிய இசைப்புயல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com