ஈரமான ரோஜாவே 2 : `தாலிய காணோம்’ - புதிய டிவிஸ்ட்

சடங்கு செய்ய வந்த பெண், ``தாலியை காட்டுமா’’ என்கிறார். காவ்யா ``தாலிய தொலைச்சிட்டேன்’’ என்று சொல்கிறார். ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.
Eeramana rojave 2
Eeramana rojave 2Twitter
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 தொடரில் இந்த வாரம் முழுவதும் தாலி செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து ஒப்பேற்றி வருகின்றனர். நாயகிகள் இருவருக்கும் தாலி பிரித்துக் கோர்த்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. நிகழ்வில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

ஜீவாவை பல வருடங்கள் காதலித்துவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜீவாவின் அண்ணன் பார்த்திபனை திருமணம் செய்து கொள்கிறார் நாயகி கால்யா. அதே சமயம் காவ்யாவின் அக்கா பிரியாவை ஜீவா திருமணம் செய்து கொள்கிறார். பிரியா தன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, ஜீவா உடன் இயல்பாக வாழத் தொடங்குகிறார். ஆனால் காவ்யா பார்த்திபனிடம் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். அவமானப்படுத்துகிறார். அதை இரு வீட்டாரும் கவனிக்கின்றனர். படிப்பு மீது உள்ள ஆர்வத்தால், காவ்யா திடீர் கல்யாணத்தில் நாட்டமில்லாமல் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

Eeramana rojave 2
ஈரமான ரோஜாவே 2 : புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டும் காவ்யா - சூடுபிடிக்கும் சீரியல்

நாயகர்கள் வீட்டில் மருமகள்களுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடத்த ஏற்பாடு செய்கின்றனர். மிகவும் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே இதில் காவ்யாவுக்கு விருப்பம் இல்லை. சடங்குக்கு ரெடியாகி கொண்டிருக்கும் போது தான் தன் கழுத்தில் தாலி இல்லாததை கண்டு பிடிக்கிறார் காவ்யா. தன் அம்மா மற்றும் அக்காவுடன் சொல்கிறார். அவர்கள் அதிர்ந்து போகிறார்கள். குளிப்பதற்காகத் தாலியைக் கழட்டி வைத்துவிட்டுச் சென்றதாகவும் வந்து பார்த்தால் தாலியைக் காணவில்லை என்றும் சொல்கிறார். காவ்யாவின் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். எங்குத் தேடியும் தாலி கிடைக்கவில்லை. வேறு வழியின்றி தாலி இல்லாமல் தாலி கோர்க்கும் சடங்கில் அமர்கிறார் காவ்யா.

Eeramana rojave 2
Eeramana rojave 2Twitter

சடங்கு செய்ய வந்த பெண், ``தாலியை காட்டுமா’’ என்கிறார். காவ்யா ``தாலிய தொலைச்சிட்டேன்’’ என்று சொல்கிறார். ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. ஆளாளுக்கு தாலியை தேடுகின்றனர். கிடைக்கவில்லை. பார்த்தியின் அத்தை வழக்கம் போல் காவ்யாவை விமர்சிக்கிறார், ``நீயா ஒளிச்சு வெச்சுட்டு காணாம போச்சுன்னு பொய் சொல்றியா’’ என்று புண்படுத்துகிறார். அடுத்த ப்ரோமோவில், காவ்யாவிடம் ``நீ உண்மையாகவே பார்த்திபன பிடிச்சு தான் கல்யாணம் பண்ணியா? இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பமில்லையா என்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். மேலும் தாலியை ஒளித்து வைத்ததே அந்த வில்லி அத்தை தான் என்பதும் அடுத்த ப்ரோமோவில் தெரிய வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Eeramana rojave 2
விஜய் டிவி-யின் ஈரமான ரோஜா கேப்ரில்லா புகைப்படங்கள் | Visual Story

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com