ஈரமான ரோஜாவே 2 : ப்ரெண்டான பிரியா! கடுப்பான காவ்யா - குழம்பும் ரசிகர்கள்

பல ஆண்டுகளாகக் காதலித்த ஜீவா தன் அக்காவுடன் நெருக்கமாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடுப்பாகிறாரா அல்லது ஜீவா குடித்து விட்டு வருவதைத் தாங்காமல் வருத்தமடைகிறாரா என்றே புரியவில்லை. காவ்யாவின் ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை குழப்புகிறது.
ஈரமான ரோஜாவே 2
ஈரமான ரோஜாவே 2Twitter
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 தொடரின் இரண்டாவது நாயகி காவ்யா வில்லியா, நாயகியா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. தன் அக்கா வாழ்க்கையில் புயலை உண்டு பண்ணத் திட்டம் தீட்டி வருகிறார் காவ்யா.

‘போன வார எபிசோடுகளில் தாலி பெருக்கு சடங்கின் போது, காவ்யாவின் (கேபி) தாலி காணாமல் போனது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் காவ்யாவை சந்தேகப்பட்டனர். இவ்வளவு ஏன், நாம் கூட காவ்யாவை தான் சந்தேகப்பட்டோம். ஆரம்பத்திலிருந்து திருமணத்தில் கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் இருந்ததால், தாலியை ஒளித்து வைத்து நாடகம் ஆடுகிறார் என்று காவ்யாவின் அம்மாவே சந்தேகப்படுகிறார்.

ஆனால் உண்மையில் ஜீவாவின் அத்தை தாலியை ஒளித்து வைக்கிறார். அந்த வீட்டிலிருந்த குட்டி பெண் தாலி வாஷிங் மெஷினில் இருந்ததாக சொல்லி கண்டுபிடித்துக் கொடுக்கிறார். பார்த்தி இரண்டாவது முறையாக காவ்யாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். இப்படியாக கதை நகர்கிறது.

ஈரமான ரோஜாவே 2
ஈரமான ரோஜாவே 2Twitter

மற்றொரு புறம் ஜீவா தினமும் குடித்து விட்டு வருகிறார். இதனால் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. பிரியா செய்த சமூக சேவையால், ஜீவா போலீசிடம் சிக்காமல் தப்பிக்கிறார். இதனால் ஜீவாவுக்கு பிரியா மீது சாஃப்ட் கார்னர் ஏற்படுகிறது. பிரியா வருத்தப்படுவதை பார்த்து இனி குடிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறார் ஜீவா. பிரியா, ஜீவா இருவரும் சகஜமாக பேசிக் கொள்வதை மறைந்திருந்து பார்க்கிறார் காவ்யா. அதனை பொறுத்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்.

பல ஆண்டுகளாகக் காதலித்த ஜீவா தன் அக்காவுடன் நெருக்கமாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடுப்பாகிறாரா அல்லது ஜீவா குடித்து விட்டு வருவதைத் தாங்காமல் வருத்தமடைகிறாரா என்றே புரியவில்லை.

காவ்யாவின் ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை குழப்புகிறது. இனிமேல் குடிக்க மாட்டேன் என்று ஜீவா பிரியாவுக்கு வாக்குக் கொடுத்த பின்னர், காவ்யா ஜீவாவை சந்தித்து தான் பார்த்தியை விவாகரத்து செய்யப் போவதாகச் சொல்கிறார். இதனால் கடுப்பான ஜீவா இந்த காவ்யா தொல்லை தாங்க முடியவில்லை என்று கீழே வைத்த கோப்பையை மீண்டும் கையில் எடுக்கிறார்.

இனி என்ன நடக்கும் என்று பார்ப்போம்

ஈரமான ரோஜாவே 2
ஈரமான ரோஜாவே 2 : புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டும் காவ்யா - சூடுபிடிக்கும் சீரியல்
ஈரமான ரோஜாவே 2
ஈரமான ரோஜாவே 2Twitter

ஜீவா குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார். இதை பிரியாவின் அப்பா பார்த்துவிடுகிறார். பிரியா தன் அப்பாவிடம் நடந்ததை சொல்கிறார். பின்னர் போதையில் இருக்கும் ஜீவாவை கைதாங்கலாக அழைத்துச் செல்கிறார். மறுநாள் ஜீவாவிடம் என்ன தான் பிரச்சனை, எதற்காக குடிக்கிறீர்கள் என்று கேட்டு விடுகிறார் பிரியா. ஜீவாவும் சிறிய தயக்கத்துக்குப் பிறகு தனக்கு காதல் தோல்வி நேர்ந்ததாக சொல்லிவிடுகிறார். பிரியா இதனைக் கேட்டு ஜீவாவை தேற்றுகிறார்.

என்னை உங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளுங்கள், மனைவியாக வேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார். ஜீவாவும் ப்ரியாவும் ஷாப்பிங் செல்கிறார்கள், அதை காவ்யா பார்த்துவிடுகிறார். மேலும் பார்த்தியிடம் அத்தை மகளை ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேள்வி கேட்கிறார்.

இதனால் பார்த்தி மனமுடைகிறார். ஜீவா காதலை மறந்து வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள நினைத்தாலும் காவ்யா விடாமல் துரத்துகிறார். இதனால் ரசிகர்கள் காவ்யா கதாபாத்திரத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கதையின் போக்கு என்னவென்பது இனி வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.

ஈரமான ரோஜாவே 2
ஈரமான ரோஜாவே 2 : `தாலிய காணோம்’ - புதிய டிவிஸ்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com