டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் எதிர் நீச்சல்! - இனிமேல் தான் மெயின் பிச்சர்

கம்பெனியில் எம்.டி ஆகத் தான் என்னை யூஸ் பண்ணிகிட்டியா? அதுக்கு தான் கல்யாணம் பண்ணியா என்று அவமானப்படுத்துகிறார். சக்தியே இப்படிப் பேசிவிட்டதால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுச் செல்கிறார் ஜனனி.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்Sun
Published on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் இடம் பிடித்து வருகிறது. கதை சற்றும் தொய்வில்லாமல் வேகமாக நகர்வதே இதற்கு காரணம்.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் சீரியல் எதிர்நீச்சல். தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் சமத்தான மகள் தான் ஜனனி. மதுரையில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆதி குணசேகரன் குடும்பத்தில் வாக்குப்படுகிறார் ஜனனி. தன் பெயரில் புது நிறுவனம் தொடங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, பெண்களை பினாமியாகவும், அடிமையாகவும் நடத்தும் குணசேகரன் வீட்டில் மருமகள் ஆகிறார் ஜனனி.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்Sun

வாக்கு கொடுத்தபடி ஜனனி பெயரில் கம்பெனி தொடங்குகிறார் குணசேகரன். ஆனால் தொடக்க விழாவில் ஜனனி அவமானப் படுத்தப்படுகிறார். எம்.டி சீட்டில் வயதான ஒருவரை உட்கார வைக்கிறார் குணசேகரன். ஜனனி அதிர்ச்சியாகி, குணசேகரிடம் கேட்கிறார். உனக்கு அனுபவம் பத்தாது. போய் வீட்ல உன் வேலைய பாரு என்று நக்கலாகப் பதில் சொல்கிறார். மற்ற மூன்று மருமகள்களும் வீட்டில் எடுபிடி வேலைகள் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஜனனிக்குப் புரிகிறது. அனைவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டனர் என்று வேதனையில் அழுகிறார் ஜனனி.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்Sun

கணவன் சக்தியிடம் நீங்க எல்லாரும் ஃப்ராட் என்று திட்டுகிறார். சக்திக்குக் கோபம் வந்து, கம்பெனியில் எம்.டி ஆகத் தான் என்னை யூஸ் பண்ணிகிட்டியா? அதுக்கு தான் கல்யாணம் பண்ணியா என்று அவமானப்படுத்துகிறார். சக்தியே இப்படிப் பேசிவிட்டதால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுச் செல்கிறார் ஜனனி.

எதிர்நீச்சல்
KGF-3 : ராக்கி பாயுடன் இணைகிறாரா பாகுபலி பிரபாஸ்?

ஒட்டுமொத்த குடும்பமும் ஜனனியைத் தேடி அலைகிறது. மற்றொரு புறம் ஜனனியின் அப்பா தன் இரண்டாவது மகள் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக, உதவி கேட்டு குணசேகரனைத் தேடி வருகிறார். ஜனனி பற்றிக் கேட்டுவிடப் போகிறார் என்று குணசேகரன் குடும்பம் நினைக்க, அவர் ஜனனிக்கு நான் வந்தது தெரிய வேணா என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுகிறார். எங்குத் தேடியும் ஜனனி கிடைக்கவில்லை. ஜனனி எங்கே? சக்தி ஜனனியின் பக்கம் நிற்பாரா? என்பது இனி வரும் எபிசோடில் தான் தெரியும். ஆரம்பத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த சீரியல் ஜனனிக்கு உண்மை தெரிய வந்த எபிசோடில் இருந்து முன்னணியில் இருக்கிறது!

எதிர்நீச்சல்
ஈரமான ரோஜாவே 2 : `தாலிய காணோம்’ - புதிய டிவிஸ்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

எதிர்நீச்சல்
தலித் வரலாறு மாதம் : ஒடுக்கப்பட்ட மக்களைப் பேசும் தமிழ் திரைப்படங்கள்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com