”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜா

தென்னிந்திய திரைப்படங்கள் பிரம்மாண்டத்தை நோக்கி நகர்வதற்கான சாளரத்தை திறந்துவைத்தவர் ராஜமௌலி. பாகுபலி போன்ற படங்களை அவர் இயக்கியிருக்கவில்லை என்றால், எங்களுக்கு மும்பையில் வேலை இல்லை
”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜா
”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜாTwitter
Published on

சூர்யா 42 திரைப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டிற்கு காரணம் ராஜமௌலி தான் எனக் கூறியிருக்கிறார் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. பாலிவுட் நடிகை திஷா படானி இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜா
Thunivu H Vinoth: ”மதம் உண்மையை மறுப்பவரை கொன்றுவிடும்” இயக்குநர் எச் வினோத் பேசியது என்ன?

படப்பிடிப்பு தொடங்கி பல கட்டங்கள் முடிவடைந்துள்ள இப்படம் பிரம்மாண்டமாக செட்கள் அமைக்கப்பட்டு, அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

2டி மற்றும் 3டி இல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 13 மொழிகளில் படம் வெளியாகும் எனவும் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சூர்யா 42 தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இந்த படம் குறித்து பேசியிருந்தார்.

சூர்யாவின் கெரியரிலேயே இது தான் அதிக பட்ஜெட் உள்ள திரைப்படம் என அவர் தெரிவித்திருந்தார். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. திரைப்படம் ஃபேண்ட்டசி கலந்த வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோஷன் போஸ்டரை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “நான் சாதாரணமான படத்தை தயாரிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன். சூர்யாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் வெளியான திரைப்படங்களை விட இந்த படம் மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.” என்றார்.

மேலும் பேசியவர், ”சூர்யா ரிஸ்க் எடுப்பதிலும், தயாரிப்பாளர்கள் பாதிக்கபடுவார்கள் என்பதிலும் கூடுதல் கவனமாக இருப்பார். குறிப்பாக என் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். அதனால், அவரிடம் இதுவரை பொருட்செலவை பற்றி கூறவில்லை. எனினும், படப்பிடிப்பில் செட்டை பார்த்ததும், நாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு புரிந்திருக்கும்” என்றார்.

”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜா
Suriya: ’வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீர் விலகல் - காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய ஞானவேல் ராஜா, சூர்யா 42வின் பிரம்மாண்ட தயாரிப்பிற்கு காரணம் இயக்குநர் ராஜமௌலி தான் எனக் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்கள் பிரம்மாண்டத்தை நோக்கி நகர்வதற்கான சாளரத்தை திறந்துவைத்தவர் ராஜமௌலி எனவும், ”பாகுபலி போன்ற படங்களை அவர் இயக்கியிருக்கவில்லை என்றால், எங்களுக்கு மும்பையில் வேலை இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

”புஷ்பா, சூர்யா 42, அல்லது எந்த தென்னிந்திய படமாக இருந்தாலும் அதற்கான வரவேற்பு மும்பையில் கிடைக்கிறது என்றால் அது ராஜமௌலியின் திரைப்படங்களால் தான்” என்றார்.

சூர்யா 42 குறித்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், படத்தின் டீசரும் ரிலீஸ் தேதியும் மே மாதம் வெளியிடப்படும் எனவும் கூறியிருந்தார்.

”சூர்யா 42வின் அதிக பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி தான்” போட்டு உடைத்த ஞானவேல் ராஜா
பொன்னியின் செல்வன் : "இந்த படத்துக்கு ஓடிடி தான் சரி" - ராஜமௌலி கருத்து

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com