பொன்னியின் செல்வனும் மூன்றாம் உலக போரும்! - வைரமுத்துவின் வைரல் ட்வீட்

மணிரத்தினம்- ஏ.ஆர். ரகுமான்- வைரமுத்து கூட்டணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் இந்த படத்தில் அந்த கூட்டணி இல்லாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வனும் முன்றாம் உலக போரும்
பொன்னியின் செல்வனும் முன்றாம் உலக போரும்Twitter
Published on

மணிரத்னத்தின் பிரமாண்ட இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது நாவலை நினைவுகூர்ந்துள்ளார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan
Ponniyin SelvanTwitter

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோழர் ராஜ்ஜியத்தின் வரலாற்றைத் திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கிடையில் மணிரத்தினம்- ஏ.ஆர். ரகுமான்- வைரமுத்து கூட்டணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் இந்த படத்தில் அந்த கூட்டணி இல்லாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் வைரமுத்து இல்லாதது குறித்துப் பேசி வருகின்றனர்.

பொன்னியின் செல்வனும் முன்றாம் உலக போரும்
பொன்னியின் செல்வன் பார்பதற்கு முன்னர் பார்க்க வேண்டிய மணிரத்னத்தின் 5 படங்கள்!
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் Twitter

இந்த நிலையில் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று தனது நாவல் குறித்துப் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நாவல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நாவல் கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி இந்த நூலை வெளியிட, எழுத்தாளர் ஜெயகாந்தன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

பொன்னியின் செல்வனும் முன்றாம் உலக போரும்
Ponniyin Selvan : பொன்னி நதி பாடலின் “ஈயாரி எசமாரி”-க்கு அர்த்தம் இதுதானா?

நிலம், நீர், காற்று மாசு படுவதால் சுற்றுச்சூழலும் மாசுபட்டு விவசாயமும் கெட்டு மனித வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை ஒரு கிராமத்துக் கதையோடு அற்புதமாக சித்தரித்திருக்கிறார் மூன்றாம் உலகப் போரில் வைரமுத்து.

இன்று பொன்னியின் செல்வன் திரைக்கு வந்திருக்கும் நிலையில், வைரமுத்து தனது மூன்றாம் உலகப்போர் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com