AjithKumar: தனியாக குழந்தையுடன் பயணித்த பெண்; உதவிய அஜித்- கணவர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு

அஜித் குமார் லண்டனிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இளம் பெண் ஒருவர் பயணித்தார். கையில் பத்து மாதமே ஆன தன் குழந்தையுடன் தனியாக பயணித்திருக்கிறார் அப்பெண்.
AjithKumar: தனியாக குழந்தையுடன் பயணித்த பெண்; உதவிய அஜித்- கணவர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு
AjithKumar: தனியாக குழந்தையுடன் பயணித்த பெண்; உதவிய அஜித்- கணவர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவுட்விட்டர்
Published on

தனியாக தன் பத்து மாத குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு, நடிகர் அஜித் குமார் முன்வந்து உதவியுள்ள சம்பவம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

தன் மனைவிக்கு உதவிய நடிகருக்கு நன்றி சொல்லி அப்பெண்ணின் கணவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். ஒரு நடிகனாக இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

நடிப்பு மட்டுமல்லாமல் அவரது நற்பண்புகளுக்காக, அவர் பிறருக்கு செய்யும் உதவிகளுக்காக பலரின் மதிப்பை பெற்றவர். அவர் அதனை வெளிகாட்டாவிட்டாலும், எப்படியும் சமூக வலைத்தளங்க்களில் விஷயம் பரவிவிடும்.

அஜித்
அஜித்Twitter

இந்நிலையில், சமீபத்தில் தனியாக கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு அஜித் குமார் உதவியுள்ள விஷயம் அனைவரது கவனத்தை பெற்று வருகிறது.

அஜித் குமார் லண்டனிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இளம் பெண் ஒருவர் பயணித்தார். கையில் பத்து மாதமே ஆன தன் குழந்தையுடன் தனியாக பயணித்திருக்கிறார் அப்பெண்.

தனியே குழந்தையையும் வைத்துக்கொண்டு, தனது பைகளையும் எடுத்துச் செல்ல சிரமப்பட்ட அந்த பெண்ணை கவனித்த அஜித், குழந்தையின் உடைமைகள் உள்ள பையை சுமந்துகொண்டார்.

அந்த பெண் வேண்டாம் என மறுத்தும், "எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், எனக்கு புரிகிறது, எந்த பிரச்னையும் இல்லை" எனக் கூறி விமானம் ஏறும்வரை பையை எடுத்துவந்திருக்கிறார்.

விமான ஊழியர்களிடம் பையை ஒப்படைத்த அஜித், அந்த பெண்ணின் இருக்கைக்கு அருகில் பையை வைக்கும்வரை உறுதிப்படுத்திக்கொண்டு, அதன் பின்னர் தனது இருக்கைக்கு சென்றுள்ளார்.

அஜித்துடன் பயணித்தவர், "தலைவா நீங்கள் ஏன் சுமக்கிறீர்கள் நான் எடுத்துக்கொள்கிறேன்" என கேட்டபோது பரவாயில்லை என மறுத்துள்ளார் அஜித். மேலும், விமானத்தில் இருந்து இறங்கி, வெளியில் வரும் ஷட்டில் பஸ்ஸில் வந்தபோதும் பையை தானே எடுத்துவந்து பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

AjithKumar: தனியாக குழந்தையுடன் பயணித்த பெண்; உதவிய அஜித்- கணவர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு
”Vijay Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்

சம்பந்தப்பட்ட பெண் ஸ்காட்லாண்டின் கிளாஸ்க்ளோ என்ற இடத்திலிருந்து சென்னைக்கு பயணித்தார். லண்டன் விமான நிலையத்தில் அவர் நடிகர் அஜித்தை சந்தித்திருக்கிறார்.

மேலும் அந்த பெண்ணுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் அஜித். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அந்த பெண்ணின் கணவர், முழு சம்பவத்தையும் விவரித்து, நடிகருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அஜித் தனக்கு இருக்கும் அந்தஸ்த்திற்கு அவரது இந்த நடவடிக்கை தன்னை முற்றிலும் நெகிழ்ச்சியடைய செய்ததாக அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாகி வருகிறது.

AjithKumar: தனியாக குழந்தையுடன் பயணித்த பெண்; உதவிய அஜித்- கணவர் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு
அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com