”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?

நம் மக்களுக்கான படம், நாம் கொண்டாடுகிற படத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு எல்லைகள் கடந்து செல்வதே புரட்சி. இது ஆஸ்கர் விருதை விடவும் பெரிய அங்கீகாரம்” என்றார்
”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?
”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?ட்விட்டர்

இந்தியா முழுவதிலும் வெளியாகும் மற்ற மொழி படங்களை ஒப்பிடும்போது, ஏன் தென்னிந்திய படங்கள் அதிகம் வெற்றிபெறுகின்றன என்பது குறித்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், விசாரணை, விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இதுவரை வெளியான அவரது படங்கள் அனைத்திலும், ஆழமான சமூக கருத்துகளை உரக்க பேசியவர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

2023ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நேற்று நடைபெற்றது, இன்றும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தென்னிந்திய படங்கள் மற்ற இந்திய படங்களை காட்டிலும் ஏன் அதிக வெற்றியடைகிறது என்பது குறித்து பேசினார்.

”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?
வெற்றிமாறன்: "ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை" - ஆதரவும், எதிர்ப்பும்!
Kantara
KantaraTwitter

“நாம் பான் இந்தியா படங்கள் குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால், இந்தியளவில் வெற்றிப்பெற்றிருக்கும் படங்கள் எதுவும், மற்ற மொழி ரசிகர்களை கவர முயற்சிக்கவில்லை. காந்தாரா, கேஜிஎஃப் போன்ற படங்களை கூறலாம். ஒரு கன்னட படம், கன்னட படமாகவே இருப்பது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

கலைக்கு எல்லை, மொழிகள் இல்லை என்கிற கருத்தும் இருக்கிறது. ஆனால், கலைக்கு கலாச்சாரம், மொழி போன்ற எல்லைகள் உண்டு. கலையை நுகர்பவர்களுக்கு தான் இந்த எல்லைகள் இல்லை”

”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?
Vetrimaran: ”ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்” - வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு
KGF
KGFTwitter

கலை எல்லைகளை கடக்க கொரோனா பெருந்தொற்று ஒரு முக்கிய கருவியாக இருந்தது என்றார் வெற்றிமாறன். கோவிட் சமயத்தில் ஒடிடி தளம், உலக சினிமாவின் சாளரத்தை மக்களுக்கு திறந்துவைத்தது என்றார்.

இது, வெவ்வேறு கோணங்களில் நம்மை படம் பார்க்கவைத்தது, ஏற்றுக்கொள்ளவும், ரசனையின் போக்கையும் மாற்றியது என்றும் வெற்றிமாறன் குறிப்பிட்டார்.

”அந்தந்த நிலத்தின் மக்களுக்காக, நமது மண் சார்ந்த படங்களை, அடையாளங்கள், தனித்துவங்களை கதைகளாக்கி படம் எடுக்கப்படுவதால் தான் தென்னிந்திய படங்கள் இந்தியளவில், உலகளவில் பேசப்பட்டன.

நம் மக்களுக்கான படம், நாம் கொண்டாடுகிற படத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு எல்லைகள் கடந்து செல்வதே புரட்சி. இது ஆஸ்கர் விருதை விடவும் பெரிய அங்கீகாரம்” என்றார்

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று. சூரி, பவானி ஸ்ரீ நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

”தென்னிந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்” - இயக்குநர் வெற்றிமாறன் பேசியது என்ன?
விடுதலை பாகம் 1: ஹீரோவாக வென்றாரா சூரி?- வெற்றிமாறன், விஜய் சேதுபதி காம்போ எப்படி இருக்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com