கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?

கேரளாவில் தினக் கூலி வேலைகளை செய்தும் பீடி சுற்றியும் வளர்ந்த சுரேந்திரன், தற்போது தன் 51 வயதில் அமெரிக்காவின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?
கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?சுரேந்தரன் கே படேல்
Published on

51 வயதில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நீதிபதியாக பதவியேற்றுள்ளர் கேரளாவைச் சேர்ந்த நபர் சுரேந்தரன் கே படேல்.

இந்த தருணத்தில், கேரளாவில் பீடி சுற்றிய, வீட்டு வேலைகள் செய்த நாட்கள் தான் தன்னை படிக்க உந்தித்தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சுரேந்தரன் 10ம் வகுப்பிலேயே ஏழ்மைக் காரணமாக பள்ளியை இடை நிறுத்தினார்.

தினக் கூலி வேலைகளை செய்தும் பீடி சுற்றியும் வளர்ந்தார். அந்த கடினமான நாட்கள் தான் வாழ்க்கை பற்றிய அவரது பார்வையை மாற்றியதாக தெரிவிக்கிறார்.

சுரேந்தரன் நிச்சயமாக படித்துத்தீர வேண்டும் என நினைத்த போது அவரது உள்ளூர் நண்பர்கள் அவருக்கு பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்.

அத்துடன் தனது சட்டப்படிப்பின் போது ஹோட்டல்களில் சுகாதாரப் பணிகளையும் செய்துள்ளார் சுரேந்திரன்.

"நான் எல்எல்பி முடித்தத்தும் இந்தியாவில் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் தான் நான் அமெரிக்காவில் பிழைத்துக்கொள்ள உதவின" எனக் கூறியுள்ளார் சுரேந்திரன்.

கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

மேலும் அவர் அமெரிக்காவிலும் வெற்றியடைய பல தடைகளைக் கடந்திருப்பதாக தெரிவித்தார்.

"நான் இந்த நிலையை அடையும் போதும், என்னைப் பற்றி தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனது ஆங்கில உச்சரிப்பை விமர்சித்தனர். எனது சொந்த கட்சியினரே நான் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?
கனிகா : 32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் - ஊர் குருவி பருந்தான கதை

"நான் இந்த நிலையை அடைவேன் என யாரும் நம்பவில்லை. ஆனால் நான் இங்கே இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்று தான், 'உங்கள் எதிர்காலத்தை வேறு யாரையும் தீர்மானிக்க விடாதீர்கள்' நீங்கள் மட்டுமே அதற்கு சொந்தக்காரர்"

கேரளாவில் பள்ளி இடைநிறுத்தம்; இன்று அமெரிக்காவில் நீதிபதி - யார் இந்த சுரேந்திரன்?
சுரபி கௌதம் : ஆங்கிலம் தெரியாமல் கேலி செய்யப்பட்ட பெண் IAS ஆன கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com