காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14

கலவியின் போது காம செயல்கள் நடைபெறுகின்றன. ஸ்பரிசம், உராய்வு, உட்புகுத்துதல், அசைவுகள், உச்சகட்டம். ஆண், பெண் இருவரும் மனம் ஒத்துத் தயாராகும் கலவிக்கு இச்செயல்கள் எல்லாம் நடந்தேறும். ஆனால், மனம் ஒத்து நடக்காவிட்டால் இதில் சில மட்டுமே நடந்தேறும்.
Lust

Lust

Twitter

Published on

பலரும் கலவியையும் காதலையும் கொண்டாடுகிறார்கள். சிலருக்கு மட்டும் செக்ஸ் என்றாலே பயம் வருகிறது. அது மனம் தொடர்பான சிக்கல்களாகவோ, உடல் தொடர்பான பிரச்சனைகளோ, சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளாகவோ இருக்கலாம்.

காதல், காமம் என்றாலே வெறுப்பாகப் பார்ப்பார்கள். இவர்களுக்கு ஆழ்மனதில் என்ன பிரச்சனை உள்ளது எனக் கண்டறிந்து அதற்கான தீர்வை நோக்கி நகரவேண்டி இருக்கும். எந்தவித பிரச்சனைகளுமே இல்லாமல் சிலருக்கு செக்ஸ் வைத்துக்கொண்டால் வலி வருகிறது. அதனால் எனக்கு செக்ஸ் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களும் உண்டு.

<div class="paragraphs"><p>Lust</p></div>

Lust

Twitter

கலவியைப் பற்றிய முழு அறிவு

கலவியின் செயல்களில் மூன்றாவது நிலையாக உட்புகுத்துதலில் பிரச்சனை ஏற்படுவதால் வலி வருகிறது. வேகமாக, முரட்டுத்தனமாக, அவசரமாக செய்யும் செயல்களால் வலி ஏற்படலாம். இதனால், ஆணைவிடப் பெண்ணுக்கு வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு, பெண் உறுப்பில் காயம்கூட ஏற்படலாம். வேகம் இல்லாமல் நிதானமான கலவியே, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறுப்புகளுக்குக் காயமோ ஏற்படாமல் தடுக்கலாம்.

புடைத்த ஆண் உறுப்புப் பெண் உறுப்பில் உட்செலுத்தி அசைப்பதற்குக் கலவி நிலை என்று பெயர். ஆணின் உறுப்பு பருத்து விம்மும் நிலையை அடையும்போதுதான் கலவியில் ஈடுபட வேண்டும். பலர் திருமணமானதும் தாங்கள் பார்த்த விலங்குகள், தாங்கள் பார்த்த நீல படங்கள், அனுபவங்கள் போன்றவை மூலம் கலவி செய்கிறார்கள்.

இந்த மாதிரியான முறையில் செய்யப்படும் கலவியில் அதிகமான இன்பம் காண முடியாது. அதனால், ஆணும் பெண்ணும் மிக விரைவிலேயே இதில் வெறுப்படைகிறார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையும் சலிப்பும் வருகிறது. எனவே, கலவியைப் பற்றிய முழு அறிவும் ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் பெண்களுக்கும் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதே இன்பம் துய்க்கவும் வாழ்க்கையில் விருப்பங்கொண்டு அனுபவிக்கமும் முடியும்.

<div class="paragraphs"><p>Lust</p></div>
உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்! | இது ச்ச்சீ விஷயமல்ல
<div class="paragraphs"><p>Lust</p></div>

Lust

Twitter

கலவியில் ஈடுபட பல்வேறு நிலைகள் உள்ளன

கலவியில் ஈடுபட பல்வேறு நிலைகள் உள்ளன. ஆனால், தவிர்க்க வேண்டிய நிலையாக இருப்பது நின்று கொண்டு புணர்ச்சி செய்யும் நிலைகள் ஏற்றவை அல்ல என காமச்சூத்திரம் சொல்கிறது. முதலாவதாக நின்று கொண்டு புணர்ச்சி செய்யும் நிலையில் சிரமத்தையும் களைப்பையும் அதிகமாக ஏற்படுத்தும். அடுத்ததாக, இந்நிலையை கையாளும் ஆணின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்களுக்குப் பிரச்சனைகள் வரலாம்.

மாதவிடாய் காலத்தில் கலவியைத் தவிர்க்கலாம். குறுகிய பெண் உறுப்புக் கொண்ட பெண் ஆணின் மீது ஏறி செய்யும் கலவியைத் தவிர்க்கலாம். அதுபோல ‘சமீபத்தில் பிரசவித்த பெண்ணும்’, ‘அதிக உடல்பருமனாக உள்ள பெண்ணும்’ ஆணின் மீது ஏறி செய்யும் கலவி நிலையைத் தவிர்க்கலாம்.

<div class="paragraphs"><p>Lust</p></div>

Lust

Twitter

காம இச்சை பெருகுவதை அறிய, மேற்சொன்ன அடையாளங்கள் உதவும்

கலவி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒருவித காதல் துவந்த யுத்தம் போன்றது என்கிறார்கள். இதில் உள்ள சிரமங்களைகூட இன்ப உணர்வோடு ஏற்றுக்கொண்டு சேரும் தம்பதியர்கள். காதல் சின்னமாகவே கருதப்படுவர். ஆணும் பெண்ணும் தங்கள் காம இச்சைக்காக நடத்தும் போராட்டமே கலவி என்கிறார் வாத்ஸ்யானார்.

ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப்பதை அறிந்துகொள்ளச் சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப்படும் சில அறிகுறிகள் அதைப் புலப்படுத்தும். உடல் தளர்தல், கண்களை மூடிக் கொள்ளுதல், வெட்கம் மறைந்துவிடுதல், இன்பமாகத் தொனி எழுப்புதல். பெண்ணுக்கு காம இச்சை பெருகுவதை அறிய, மேற்சொன்ன அடையாளங்கள் உதவும்.

இதுபோல ஆணுக்கு காம இச்சை பெருகும்போது ஆண் உறுப்பு விரைத்துக்கொள்கிறது.

<div class="paragraphs"><p>Lust </p></div>

Lust

Twitter

பொதுவாகத் தழுவுதல் என்பது காம உறவின் ஒரு அங்கம்

தழுவுதல் அதிகமாக இருந்தால் காம இச்சை அதிகரிக்க உதவியாக இருக்கும். தழுவுதல் என்ற செயல்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்தமானவைதான். சில தருணங்களில் பெண்களுக்குச் சற்று அதிகமாகவே பிடிக்கலாம். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்துமா எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

பொதுவாகத் தழுவுதல் என்பது காம உறவின் ஒரு அங்கம். ஆனால், மசாஜ் எனப்படுவது அப்படியல்ல. இது வேறு. மசாஜ், எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். மசாஜில் தொடுதல் சுகம் கிடைத்தாலும், அது செய்துகொள்பவருக்கு மட்டுமே சுகம் கிடைக்கும். செய்யப்படுபவருக்குச் சுகம் இருக்காது. தழுவுதல் வேறு மசாஜ் வேறு. இரண்டும் ஒன்றல்ல… தழுவுதல் காமத்தால், காதலால் ஒருவரை ஒருவர் தொட்டு கொள்வதோ உரசிகொள்வதோ… ஆனால், மசாஜ் எனப்படுவது காதல் காமம் கலந்தது அல்ல. இச்சையை அதிகரிக்கத் தழுவுதல் முறை காம உறவை பலப்படுத்தும்.

முந்தைய பகுதியைப் படிக்க

<div class="paragraphs"><p>Lust</p></div>
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com