50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?

கிட்ட தட்ட 50 ஆண்டுகளாக அனிமா உணவாக எதையுமே உட்கொள்ளாமல், தேநீர் அல்லது ஊட்டச்சத்து பானங்கள் தான் எடுத்துக்கொள்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?
50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?ட்விட்டர்
Published on

உணவு எதுவும் சாப்பிடாமல், வெறும் தேநீர் அருந்தியே உயிர்வாழ்ந்து வருகிறார் மேற்குவங்கத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி ஒருவர்.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நகரம் பெல்திஹா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனிமா சக்கரவர்த்தி என்ற பெண். இவருக்கு வயது 76.

கிட்ட தட்ட 50 ஆண்டுகளாக அனிமா உணவாக எதையுமே உட்கொள்ளாமல், தேநீர் அல்லது ஊட்டச்சத்து பானங்கள் தான் எடுத்துக்கொள்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, அனிமாவின் மகன் கூறியதாவது,

“எங்கள் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அம்மா தான் வீட்டு வேலைகளுக்கு சென்று எங்களை வளர்த்தார்.

அப்படி அவர் பணிபுரிந்த வீடுகளில் அவருக்கு உணவு ஏதேனும் கிடைத்தால், அதனை எங்களுக்கு வழங்குவார். அப்போது அவர் சாப்பிட எதுவும் இருக்காது. இதனால், நீராகாரங்களை அவர் உட்கொள்ள தொடங்கினார்” என்றார்

50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?
தேநீர் வரலாறு : இதுதான் டீ-யின் கதை |History of Tea

இது குறித்து ஹூக்ளி நகரத்திலுள்ள மருத்துவர் பில்லேஸ்வர் பல்லாவ் கூறுகையில், “நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, திடமானதாக இருக்கலாம், அல்லது நீராகாரம் ஆகவும் இருக்கலாம். நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்பட்சத்தில், இதில் பெரிய வித்தியாசம் இல்லை” என்றார்.

நமது உடல் சீராக செயல்பட தேவையான கலோரிகள் எந்த வடிவத்தில் கிடைத்தாலும், அது கிடைக்கும்வரை எந்த பிரச்னையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்

50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?
7 வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்; உயிருடன் இருப்பதை கண்டறிந்த போலீஸ் - எப்படி?

அனிமா சக்கரவர்த்தி, சுமார் 50 ஆண்டுகளாகவே நீராகாரத்தை உட்கொண்டு தான் உயிர்வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல் உபாதைகள் எதுவும் இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

அனிமா குறித்து அறிந்த அவரது ஊர் மக்கள் கூறுகையில், தங்களது ஊரில் ஒரு பெண், உணவு உண்ணாமல், வெறும் நீராகாரங்கள் அருந்தி உயிர்வாழ்ந்து வருவது சுவாரஸ்யமாகவும், அதே சமயத்தில் ஆச்சரியமான விஷயமாகவும் உள்ளது எனக் கூறினர்

50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் அதிசயப் பெண் - எங்கே? என்ன காரணம்?
இறந்த மூதாட்டி மீண்டும் வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரிழந்த அதிசயம் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com