ஆந்திரா: கோதாவரி ஆற்றங்கரையில் சூடு பிடிக்கும் நத்தைக் கறி வியாபாரம் - என்ன காரணம்?

கோதாவரி ஆற்றங்கரையில் நத்தை வியாபாரம் அதிகரித்துள்ளது. நத்தையை உட்கொள்ளும் மக்களின் விகிதமும் இங்கு சமீப காலமாக அதிகமாகியுள்ளது. நத்தையை அதன் கூட்டில் இருந்து பிரித்து, சுத்தம் செய்து மக்களுக்கு விற்று வருகின்றனர்.
ஆந்திரா: கோதாவரி ஆற்றங்கரையில் சூடு பிடிக்கும் நத்தைக் கறி வியாபாரம் - என்ன காரணம்?
ஆந்திரா: கோதாவரி ஆற்றங்கரையில் சூடு பிடிக்கும் நத்தைக் கறி வியாபாரம் - என்ன காரணம்?twitter

ஆந்திராவின் கோதவரி நதிக்கரைப் பகுதியில் நத்தை வியாபாரம் தற்போது தலைத் தூக்கியுள்ளது. மக்கள் அதிகமாக நத்தைக் கறி சாப்பிட விரும்புவதால், இந்த தொழில் அங்கு சூடு பிடித்திருக்கிறது.

உணவுப் பிரியர்கள் வித விதமான உணவுகளை தேடித் தேடி சாப்பிடுவது வழக்கம் தான். சுவை என்ற அம்சத்தை கடந்து, நாம் சாப்பிடும் உணவு, நமக்கு இயற்கையாக உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் மருத்துவம் எனவும் நாம் கூறலாம்.

அந்த வகையில், தற்போது மக்களிடம், குறிப்பாக ஆந்திராவில் ஒரு பகுதி மக்களிடம் அதிக பிரபலமாக இருக்கும் உணவு வகை நத்தைக் கறி.

கோதாவரி ஆற்றங்கரையில் நத்தை வியாபாரம் அதிகரித்துள்ளது. நத்தையை உட்கொள்ளும் மக்களின் விகிதமும் இங்கு சமீப காலமாக அதிகமாகியுள்ளது. நத்தையை அதன் கூட்டில் இருந்து பிரித்து, சுத்தம் செய்து மக்களுக்கு விற்று வருகின்றனர். அதனை மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிட எளிதாக இருக்கிறது.

நத்தைக்கறி மற்ற அசைவ உனவுகள் போல ஒன்று தானே எனக் கேட்டால், ஆமாம் எனச் சொல்லலாம். ஆனால், ஏன் திடீரென இந்த அதிகரிப்பு என்று கேட்டால், அதன் மருத்துவ குணங்கள் தான் காரணம் என்கின்றனர்.

ஆந்திரா: கோதாவரி ஆற்றங்கரையில் சூடு பிடிக்கும் நத்தைக் கறி வியாபாரம் - என்ன காரணம்?
தெலங்கானா: ”வரதட்சணை போதவில்லை” திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் ட்விஸ்ட்

நத்தை கறி ஏன் சாப்பிடுகிறார்கள்?

அசைவ உணவுப் பிரியர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சோர்வு போன்றவற்ரை குணமாக்க நத்தைகள் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

நத்தைக் கறி சமைப்பது சற்றே கடினமான, அதிக நேரம் எடுக்கும் வேலை என்றாலும், அதன் அதீத சுவை அவர்களுக்கு அலுப்பை தெரியப்படுத்துவதில்லை என்கிறனர்.

நத்தை சுத்தம் செய்யும் முறை என்ன?

வியாபாரிகள் நத்தைகளை அதன் கூட்டில் இருந்து பிரித்தெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விற்கின்றனர்.

கூட்டில் இருந்து பிரிக்கப்பட்ட நத்தையை உப்பு மற்றும் மஞ்சள் தூள் பயன்படுத்தி கழுவவேண்டும். அதன் பின்னர் அதனை மோரில் ஊறவைத்து சுத்தம் செய்யவேண்டும்.

இது நத்தையில் இருக்கும் பிசுபிசுப்பை அகற்றி, அதிலிருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை போக்கவும், கெட்ட குணங்களை அகற்றவும் உதவுகிறது.

அதன் பின்னர் நம் சுவைக்கு ஏற்ப நத்தைக் கறியை சமைத்து சாப்பிடலாம்.

கோதாவரி நதிக்கரையில், ஒரு கிலோ நத்தைக் கறி ரூ.100இலிருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது

ஆந்திரா: கோதாவரி ஆற்றங்கரையில் சூடு பிடிக்கும் நத்தைக் கறி வியாபாரம் - என்ன காரணம்?
ஆந்திரா : அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல்; டிரைவருக்கு தலையில் காயம் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com