Yogi Adityanath: உ.பி முதலமைச்சருக்கு கோவில் கட்டிய நபர் - எத்தனை லட்சம் செலவு தெரியுமா?

இந்த கோவிலுக்கு பூசாரிகள் யாரும் இல்லை. பிரபாகர் மௌரியாவே ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் பூஜை செய்து, ஆரத்தி எடுக்கிறார். பூஜையின் போது உச்சரிக்கப்படும் பாடல், முதலமைச்சர் ஆதித்தியநாத்தின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
Yogi Adityanath
Yogi Adityanathடிவிட்டர்
Published on

உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி யோகி ஆதித்தியநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார் பிரபாகர் மௌரியா என்ற நபர்.

திரை பிரபலங்கள் மீது கொண்ட அதீத ஈர்ப்பால் அவர்களுக்கு ரசிகர்கள் கோவில்கள் கட்டிய சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். நடிகை குஷ்புவுக்கு கோவில் எழுப்பிய விவகாரம் நாம் அறிந்ததே. ஒரு ரசிகர் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூபாய் 60 கோடி செலவில் தன் வீட்டிலேயே சிலை வைத்தார்.

அந்த வகையில், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்திற்கு கோவில் கட்டியுள்ளார் பிரபாகர் மௌரியா என்ற நபர். இவர் மௌரியா கா பர்வா என்ற கிராமத்தை சேர்ந்தவர். 32 வயதாகும் மௌரியா தன்னை ஒரு 'யோகி பிரச்சாரக்' (யோகி விளம்பரதாரர்) என்று சொல்லிக்கொள்கிறார்.

யார் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களோ, அவருக்கு, அதே அயோத்தியில் கோவில் எழுப்புவதாக தனக்கு தானே உறுதிமொழி ஏற்றுகொண்டுள்ளார் பிரபாகர்.  கடந்த ஆக்ஸ்ட் 5 ,2020ல் அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின், இவரும் கோவில் கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கையில் வில், முதுகில் அம்பு வைக்கும் கூடை, தலைக்கு பின்னால் சூரியன் ஆகியவை உள்ளன. ராமர் சூரிய வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சூரியன் அவர் தலைக்கு பின்னால் வைக்கப்பட்டதாக சொன்னார். இந்த கோவிலுக்கு ஸ்ரீ யோகி மந்திர் என பெயரிட்டுள்ளார்.

Yogi Adityanath
துபாய் : 40 ஆயிரம் கோடி செலவில் உருவாகும் Moon Resort - நிறைவேற இருக்கும் கனவுத் திட்டம்!

ராஜஸ்தான் மற்றும் பாராபன்கி என்ற இடங்களிலிருந்து இரண்டு சிற்பக்கலைஞர்களை கொண்டு யோகி ஆதித்தியநாத்தின் சிலையை வடிவமைத்துள்ளார் பிரபாகர்.

இந்த கோவிலுக்கு பூசாரிகள் யாரும் இல்லை. பிரபாகர் மௌரியாவே ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் பூஜை செய்து, ஆரத்தி எடுக்கிறார். பூஜையின் போது உச்சரிக்கப்படும் பாடல், முதலமைச்சர் ஆதித்தியநாத்தின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோவில் குறித்து பேசிய மௌரியா யோகியின் சிலை ஏந்திக்கொண்டிருக்கும் வில்லும் அம்பும் சிலைக்கு பொருத்தமானவை என்று  கூறினார். "யோகி ஜி தனது அம்புகளை அனைத்து வகையான குற்றங்களையும் ஊழலையும் நோக்கி குறிவைக்கிறார். இதுதான் சரியான சின்னம்".

ரூபாய் ஏழு லட்சம் செலவு செய்து இந்த கோவிலை எழுப்பியுள்ளார் பிரபாகர் மௌரியா. யூடியூப் பிரபலமான இவர், அவரது சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தான் 'ஸ்ரீ யோகி மந்திரை' கட்டியுள்ளார்

Yogi Adityanath
Mother's Day: தாய்க்கு கோவில் எழுப்பிய ராஜேந்திர சோழன்! என்ன சிறப்பு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com