விண்ணில் இருந்து மண்ணைத் தொடும் தூண்கள்! - பிரமிக்க வைக்கும் இந்திய கோவில்கள்

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்களை, மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒன்றாக இணைந்து வசித்து வருகின்றனர். அந்த மக்களின் வழிபாடுகள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இதற்கு தஞ்சை பெரிய கோவில், சிறந்த சான்றாகும். அப்படி இந்தியாவில் உள்ள பெருமை மிக்க திருத்தலங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.
Beautiful temples in India with intriguing facts
Beautiful temples in India with intriguing factsTwitter
Published on

இந்தியா ஒரு பாரம்பரியமிக்க, வரலாற்றுப் பெருமை உடைய, கலாச்சாரமிக்க, மதசார்பற்ற நாடு என்பது மறுக்கமுடியாத உண்மை. இங்கு தான் பல்வேறு கலாச்சாரங்களை, மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒன்றாக இணைந்து வசித்து வருகின்றனர்.

அந்த மக்களின் வழிபாடுகள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இதற்கு தஞ்சை பெரிய கோவில், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் போன்றவை சிறந்த சான்றுகளாகும். இத்தகைய பெருமைகளைக் கொண்ட இந்திய நாட்டை அண்டைய நாட்டு மக்கள் வியந்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே. அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெருமை மிக்க திருத்தலங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.

இந்தியாவில் பிரம்மனுக்காக அமைக்கப்பட்ட 5 கோவில்களில் புகழ் பெற்றது ராஜஸ்தான் புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோவில். மன்னர் அவுரங்கசீப் காலத்தில் நடைபெற்ற போரின் போது ராஜஸ்தானில் உள்ள இந்து கோவில்கள் அடித்து உடைக்கப்பட்ட போது இந்த கோவில் மட்டும் தப்பியது.

அடுத்ததாக அசாமில் இருக்கும் காமாக்யா கோவில், இது இந்தியாவில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அதாவது, இந்த

கோவிலில் உள்ள அம்மனுக்கு மாதவிடாய் ஏற்படுவதாக நம்பும் மக்கள் பருவமழை காலத்தில் 3 நாட்களுக்கு கோவில்களை மூடுகின்றனர்.

Beautiful temples in India with intriguing facts
உனகோடி : 99 லட்சம் கடவுள்கள் இருக்கும் இந்தியாவின் அதிசய கோவில்! பின்னணி என்ன?

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள வீரபத்ரா கோவில் 70 தூண்களைக் கொண்டுள்ளது. இதில் ஒரு தூண் கூரையில் இருந்து தரையைத் தொடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தான்.

தமிழகத்தில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் 4000 தூண்களை உள்ளடக்கியது. இந்த தூண்கள் தனித்தனி பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. மேலும், இந்த கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.

குஜராத்தின் கடல் பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் கோவிலின் சுவாரஸ்யம் என்னவென்றால், கடலில் அலைகள் இல்லாத போது தான் இந்த கோவில் கண்களுக்குப் புலப்படும்.

Beautiful temples in India with intriguing facts
பூமிக்கு கீழ் கட்டப்பட்ட இந்தியாவின் தலைகீழ் கோவில் - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

மகாராஷ்டிராவில் உள்ள குடைவரைக் கோவில் எல்லோரா குகைகளில் உள்ள பாறைகளைக் குடைந்து கட்டப்பட்டது. கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் கிபி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த பழமை வாய்ந்த கோவிலுக்குள் மாடர்ன் உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com