மும்பை: காதலை சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை - உயர்நீதிமன்றம் கருத்து

எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல், காதலை வெளிப்படுத்த பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் துன்பிறுத்தலாகாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை: காதலைச் சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை! உயர் நீதிமன்றம் கருத்து
மும்பை: காதலைச் சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை! உயர் நீதிமன்றம் கருத்துcanva
Published on

ஒரு ஆண், பாலியல் நோக்கமின்றி, தன் காதலை வெளிப்படுத்த பெண்ணின் கையை பிடிப்பது குற்றமில்லை எனவும், அது பாலியல் துன்புறுத்தலாகாது எனவும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 17 வயது சிறுமியின் தந்தை ஒருவர், வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவ்வழக்கில், அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் மகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லைக் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

கல்லூரியில் படித்துவரும் அவரது மகள் சில நாட்கள் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஆட்டோவில் கல்லூரிக்கும் டியூஷனுக்கும் சென்று வந்ததாகவும், சில நாட்களுக்கு பிறகு செல்வதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த இடைவெளியில் அந்த பெண்ணுடன் ஆட்டோ ஓட்டுநருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பெண் ஆட்டோவில் செல்வதை நிறுத்திய பிறகும் அவரை ஆட்டோ ஓட்டுநர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

பல முறை கண்டித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு நாள் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி தன் இரு சக்கர வாகனத்தில் ஏறச் சொல்லியிருக்கிறார்.

அந்த பெண் மறுத்தபோது, அவரது கையைப் பற்றி தான் அவரை காதலித்து வருவதாகவும், பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச்செல்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மும்பை: காதலைச் சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை! உயர் நீதிமன்றம் கருத்து
Romeo Juliet: 16 வயதில் நிர்வாண காட்சி - 55 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடுத்த நடிகர்கள்

இதனை மறுத்த அந்த 17 வயது பெண் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் பிறகே வழக்கு பதியப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் மீது ஐபிசி 354, 354-A, 354-D மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கினை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பாரத் டாங்க்ரே தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அத்தீர்ப்பில், எந்த வித பாலியல் நோக்கமும் இல்லாமல், காதலை வெளிப்படுத்த பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் துன்பிறுத்தலாகாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும், இனி அந்த பெண்ணை தொடர்புகொள்ள எந்த விதத்திலும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவருக்கு எச்சரிக்கை விடுத்து இந்த ஜாமினை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பு குறித்த உங்கள் கருத்து என்ன?

மும்பை: காதலைச் சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை! உயர் நீதிமன்றம் கருத்து
LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com