கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்து

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்த இளைஞர் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் தான் உடலுறவு வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்து
கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்துTwitter
Published on

கல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பருவ வயதுப் பெண்கள் இரண்டு நிமிட இன்பத்துக்கு இடமளிக்காமல் தங்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்கள் இளம் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களின் கண்ணியம் மற்றும் உடல் சார்ந்த சுய உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

20 வயது இளைஞர் ஒருவரின் பாலியல் வன்புணர்வு போக்சோ வழக்கு மேல்முறையீட்டில் இத்தகைய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்த இளைஞர் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் தான் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், இப்போது அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் தான் சம்மதத்துடனே உறவு வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்த சாரதி சென், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். வழக்கு குறித்து இளைஞர்கள், பதின்பருவத்தினரின் உரிமைகள் தொடர்பாக விரிவான பாலியல் கல்வி தேவை எனக் கூறியுள்ளனர்.

இதன் மூலம் பருவ வயதில் கொள்ளும் பாலியல் உறவுகளால் ஏற்படும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.

"பருவ வயதில் உடலுறவு கொள்வது இயல்பானது. ஆனால் ஆணோ பெண்ணோ மற்றொருவரால் பாலியல் செயல்களுக்கு தூண்டப்படுவது தனிநபரின் செயல்சார்ந்தது. எனவே எல்லா பாலியல் தூண்டுதலையும் இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியாது." என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பருவ பெண்கள் மற்றும் ஆண்களுக்காக சில விஷயங்களை நீதிமன்றம் பரிந்துரைத்தது.

பருவ பெண்களுக்காக கூறப்பட்டவை

பெண்களின் உடல்-நேர்மைக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும்.

பெண்களின் கண்ணியமும் சுய மதிப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.

பாலினத் தடைகளைத் தாண்டி ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி வளர வேண்டும்.

இரண்டு நிமிட பாலியல் இன்பத்துக்கு இடம் கொடுக்கும் போது சமுதாயத்தின் பார்வையில் மோசமானவளாக தெரிவதனால், பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்து
மும்பை: காதலை சொல்ல பெண்ணின் கையை பிடிப்பது பாலியல் குற்றமில்லை - உயர்நீதிமன்றம் கருத்து

பருவ வயது ஆண்கள்

பெண்களுக்காக மேலே கூறப்பட்ட பொறுப்புகளை மதிக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பெண்களை மதிப்பதற்காக உங்கள் மனதை பழக்கப்படுத்த வேண்டும்.

கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்து
அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்

பெண்களின் சுய மதிப்பு, கண்ணியம், தனியுரிமை (பிரைவசி) மற்றும் உடலின் சார்ந்த உரிமைகளை மதிக்க வேண்டும்.

பருவ வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுறவு பற்றிய பெற்றோரின் வழிகாட்டுதல் மற்றும் கல்வியை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர் முதல் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.

கல்கத்தா: "பருவ பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் கருத்து
பெண்களின் 7 பருவ காலமும் ஆண்களின் 7 பருவ காலமும் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com