மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video

புகார் அளித்த நபரிடம் அதிகாரிகள் அவர் கேட்ட லஞ்ச பணத்தை அளிக்குமாறு கூறியுள்ளனர். சரியாக லஞ்சம் வாங்கும் சமயத்தில் அவரை கையும் களவுமாக பிடித்துவிடலாம் என கூறப்பட்டது.
மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video
மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Videotwitter

லஞ்சம் வாங்கும் சமயத்தில் போலீசாரிடம் பிடிபட்டதால் வாங்கிய ரூ.5000 பணத்தை மென்று முழுங்கியுள்ளார் மத்திய பிரதேசத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி ஒருவர்.

இவர் பணத்தை பொறுமையாக மென்று விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த வீடியோவை என் டி டி வி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளது

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் கஜேந்திர சிங்.

லோக் ஆயுக்தாவின் சிறப்பு காவல் துறைக் குழு கண்காணிப்பாளர் சஞ்சய் சாஹு இந்த சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதாவது, ”பர்கேடா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் எங்களிடம் கஜேந்திர சிங் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் ஒன்றை அளித்தார்.

இதனடிப்படையில் அவரை கையும் களவுமாக பிடிக்க சிறப்பு அதிகாரிகாரிகள் நியமிக்கப்பட்டு, திட்டம் ஒன்று தீட்டப்பட்டது.

மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video
Paytm ஸ்கேனரை வைத்து வழக்கறிஞர்களிடம் லஞ்சம் வாங்கிய டவாலி - எங்கே?

புகார் அளித்த நபரிடம் அதிகாரிகள் அவர் கேட்ட லஞ்ச பணத்தை அளிக்குமாறு கூறியுள்ளனர். சரியாக லஞ்சம் வாங்கும் சமயத்தில் அவரை கையும் களவுமாக பிடித்துவிடலாம் என கூறப்பட்டது.

அதிகாரிகள் சொன்னப்படி, வருவாய் அதிகாரி கஜேந்திர சிங் கேட்டிருந்த 5000 ரூபாயை எடுத்துக் கொண்டு புகார் அளித்த நபர் கடந்த திங்கட்கிழமையன்று அவரை சந்தித்துள்ளார்.

அப்போது கஜேந்திர சிங்கிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர் பணத்தை கையில் பெற்ற சமயத்தில் லோக் ஆயுக்தா சிறப்பு குழு அதிகாரிகள் அவரை பிடித்தனர்.

போலீசாரிடம் பிடிபட்ட மாத்திரத்தில் அதிகாரி கஜேந்திர சிங் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று முழுங்கியுள்ளார்.

அவரை கைது செய்த அதிகாரிகள் முதலில் மருத்துவமனையில் சோதனை செய்தனர். அவர் உடல் நலம் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியான பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video
ரூ.100 லஞ்சம் வாங்கிய ரயில்வே அதிகாரி: 32 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தண்டனை- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com