1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை - காரணம் என்ன?

சீனாவிற்கு குரங்குகளை அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை : காரணம் என்ன?
1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை : காரணம் என்ன?Twitter
Published on

இலங்கையில் இருந்து அழிந்து வரும் டோக் மக்காக் குரங்குகளை இறக்குமதி செய்யுமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் டோக் மக்காக் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இலங்கையில் சுமார் 2 முதல் 3 மில்லியன் குரங்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வகை குரங்குகள் விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்வதாகவும், சில சமயம் மக்களையும் இந்த குரங்குகள் தாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அழிந்து வரும் குரங்குகளை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுமாறு இலங்கையிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சீனா உயிரியல் பூங்கா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவிற்கு டோக் குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த கலந்துரையாடலையும் நடத்தவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை : காரணம் என்ன?
வெந்நீரில் குளிக்கும் விசித்திர குரங்குகள் - குளிருக்காக அல்ல வேறு என்ன காரணத்திற்காக?

மேலும், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குரங்கு ஏற்றுமதி விவகாரம் தொடர்பாக அந்தக் குழு ஆராய்ந்து வருவதாகவும் குணவரதன தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்யமாட்டார்கள் என்றாலும் நாட்டின் பல பகுதிகளில் குரங்குகளால் பயிர் சேதம் ஏற்படுவதால் அவர்கள் கோரிக்கையை பரிசீலித்துள்ளனர். விவசாய பகுதிகளை அழிக்கும் குரங்குகள் மீது கவனம் செலுத்தப்படும் என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் காட்டு விலங்குகளால் பயிர் சேதம் குறித்த முதற்கட்ட அறிக்கை, தென்னை பயிர்களை சேதப்படுத்துவதற்கு டோக் மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்களே காரணம் என்றும், யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பயிர் சேதத்தால் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 30,215 மில்லியன் இலங்கை ரூபாய் (87.5 மில்லியன் டாலர்) நிதி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை மதிப்பிடுகிறது.

எனவே சீனாவிற்கு குரங்குகளை அனுப்புவதன் மூலம் இலங்கைக்கு பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது இதற்கிடையில் வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1 லட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் இலங்கை : காரணம் என்ன?
ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com