dead body
dead bodyTwitter

உணவு பரிமாற மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் - நடந்தது என்ன?

கணவன் மனைவி இருவரும் இரவில் மது அருத்திவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தனக்கு உணவு பரிமாற மறுத்ததால் போதையில் இருந்த மனைவியைத் தலையணை வைத்து வினோத் கொலை செய்துள்ளார்.
Published on

டெல்லி சுல்தான்பூரை சேர்ந்த வினோத் குமார் என்பவருக்கும் சோனாலி என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

அவர்கள் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி இரவு கணவன் - மனைவி இருவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர்.

போதையில் இருந்த மனைவி, கணவர் வினோத்திற்கு உணவு பரிமாற மறுத்துள்ளார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த கணவன் போதையில் இருந்த மனைவியைத் தலையணையால் கொலை செய்துள்ளார்.

liquor
liquorpexels

பின்னர் மனைவியின் சடலத்துடன் இரவு முழுவதும் உறங்கி காலையில் எழுந்ததும் சோனாலியை எழுப்பி உள்ளார்.

மனைவி உயிரிழந்துவிட்டார் என்று போதை தெளிந்த பிறகு தான் வினோத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து வீட்டிலிருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வினோத் தப்பிச்சென்றிருக்கிறார்.

dead body
6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?
man
manPexels

நீண்ட நேரமாகியும் சோனாலி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

dead body
காதலரை கொலை செய்த கணவர், துக்கம் தாங்காமல் 40 வயது பெண் தற்கொலை - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com