கேராளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக  இயக்குநர் கைது - என்ன நடந்தது?
கேராளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கைது - என்ன நடந்தது?லட்சுமி தீப்தா

கேரளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கைது - என்ன நடந்தது?

பல நாட்கள் படமாக்கப்பட்ட பின் தான் அது ஒரு ஆபாசப்படம் எனத் தெரியவந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதால் நடித்தாக வேண்டும் என என்னை இயக்குநரும் ஓடிடி உரிமையாளரும் மிரட்டினர் என அந்த இளைஞர் புகாரில் தெரிவித்துள்ளார்.
Published on

கேரளாவில் ஆபாச வெப் தொடரில் இளைஞரை மிரட்டி நடிக்க வைத்த தாக பெண் இயக்குநர் லட்சுமி தீப்தா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தீப்தா. இவர் சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளம் ஒன்றுக்காக வெப் தொடர் ஒன்றை இயக்கினார்.

அந்த தொடரில் திருவனந்தபுரம் வெங்காணூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாயகனாக நடித்தார்.

தொடரில் நடித்து முடித்த நாயகன் திருவனந்தபுரம் அருவிக்கரை காவல்துறையில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளார்.

அதில், "ஒரு சஸ்பென்ஸ் வெப்தொடரில் நடிப்பதற்கா என்னை ஒப்பந்தம் செய்தனர். நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன்.

பல நாட்கள் படமாக்கப்பட்ட பின் தான் அது ஒரு ஆபாசப்படம் எனத் தெரியவந்தது.

ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதால் நடித்தாக வேண்டும் என என்னை இயக்குநரும் ஓடிடி உரிமையாளரும் மிரட்டினர்.

அந்த தொடரை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேராளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக  இயக்குநர் கைது - என்ன நடந்தது?
வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?

அத்துடன் இந்த தொடர் வெளியானால் தனது குடும்ப வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து இயக்குநர் லட்சுமி தீப்தா மற்றும் ஓடிடி உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் அருவிக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இயக்குநட் லர்சுமி தீப்தா கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இறுதியாக காவல்துறையினர் லட்சுமி தீப்தாவைக் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கேராளா : இளைஞரை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக  இயக்குநர் கைது - என்ன நடந்தது?
கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com