அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர் - பின்னணி என்ன?

இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியிருக்கிறார் அதானி. அதில் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மற்றொரு சர்வதேச திட்டத்துக்காக தான் இப்போது வங்காள தேசம் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்தித்துள்ளார் அதானி.
அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர்
அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர் Twitter
Published on

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் அதானி. அதானி குரூப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியிருக்கிறது. உலக பணக்காரர் பட்டியலில் முதல் ஆசியராக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் அதானி.

இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியிருக்கிறார் அதானி. அதில் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மற்றொரு சர்வதேச திட்டத்துக்காக தான் இப்போது வங்காள தேசம் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்தித்துள்ளார் அதானி.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹசினாவை டெல்லியில் சந்தித்தார் அதானி. இந்த சந்திப்புக் குறித்து அவர் தனது ட்விட்டரில், "பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை டெல்லியில் சந்தித்தது பெருமையான ஒன்று. வங்காளதேசம் குறித்த அவரது நோக்கம் மிகவும் இன்ஸ்பிரேஷனலாகவும் பிரமிக்கவைக்கும் வகையில் உறுதியாகவும் உள்ளது.

பிஜோய் தேபாஷ் நாளான 16 டிசம்பர் 2022 அன்று எங்கள் 1600 மெகாவாட் கோடா மின் திட்டம் மற்றும் வங்காளதேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட டிரான்ஸ்மிஷன் லைனை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர்
அதானி சாம்ராஜ்ஜியம் கடனில் மூழ்கும் ?: பங்குகளை சரியவைத்த அறிக்கை | Explained

அதானி குரூப்பின் அதானி பவர் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் 1600 மெகா வாட் அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அத்துடன் வாங்காளதேசத்துக்கு அர்பணிக்கப்பட்ட ட்ரான்ஸ்மிஷன் லைன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Bangladesh Power Development Boardக்கு மின்சாரம் அனுப்பும் திட்டம் நிறைவேறியிருக்கிறது.

ஷேக் ஹசினா 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் ஷேக் ஹசினாவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர்
Adani : உலகின் மூன்றாவது பணக்காரராக உயர்ந்தார் அதானி - சொத்து மதிப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com