11 கிலோ தங்க நாணயம் ஹைதராபாத் நிஜாம்களின் வசமானது எப்படி? - வியக்க வைக்கும் தகவல்கள்

இந்த நாணயம் எப்படி ஹைதராபாத்திற்கு வந்திருக்கும்? என்பது தெளிவற்றதாகவே உள்ளது என்றார். பீஜப்பூர் கைப்பற்றப்பட்டபோது, சோர்வுற்று பசியுடன் இருந்த தனது வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவுரங்கசீப் ஏற்பாடு செய்ததை சல்மா இங்கே குறிப்பிடுகிறார்.
Coin
CoinTwitter
Published on

சமீபத்தில் சைபாபாத் நாணயக் கண்காட்சியில் ஒரு தங்க நாணயத்தின் புகைப்படம் தனித்து காணப்பட்டது. 11935. 8 கிராம் எடைகொண்ட அந்த தங்க நாணயம் பேரரசர் ஜஹாங்கீருக்கு சொந்தமானதாகும். அது ஹைதராபாத்தின் நிஜாம் VIII என்ற பெயருடைய முகரம் ஜாவால் பெறப்பட்டது.

மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் டெக்கான் ஆய்வுகளுக்கான ஹெச்கே ஷெர்வானி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் சல்மா அகமது ஃபரூக்கின் கூற்றுப்படி, வரலாற்றாசிரியர்களும் சிபிஐ அதிகாரிகளும் இணைந்து முயற்சித்ததில் ஒரு சுவாரஸ்யமான நூல் வெளிப்படுகிறது.

அந்த புத்தகத்தில் முகலாயர்கள், நிஜாம்கள் மற்றும் உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் எப்படி நிஜாம்களின் வசம் வந்தது? என்பன குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

gold coin
gold coinTwitter

"உலகின் மிகப்பெரிய நாணயம் சுதந்திரம் பெறும் வரை ஹைதராபாத் நிஜாம்களிடம் இருந்தது. கனமான தங்கத்தில் அச்சிடப்பட்ட அந்த நாணயத்தை ஜஹாங்கீர் கௌகாப்-இ-தாலி என்று குறிப்பிட்டார் என்பது அனைவருக்கும் தெரியாது" என்று பேராசிரியர் சல்மா கூறினார்.

சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் சாந்தோனு சென்னின் 'சிபிஐ டேல்ஸ் ஃப்ரம் தி பிக் ஐ' எனும் புத்தகத்தில், இந்த ஜாகர்நாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Gold coin
Gold coin

இதுகுறித்து பேராசிரியர் சல்மா கூறுகையில், ஜஹாங்கீரின் ஆட்சிக் காலமாகிய 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரம்மாண்டமான மற்றும் இராசி நாணயங்களை அச்சடிக்கத் தொடங்கினர். இத்தகைய பிரம்மாண்டமான நாணயங்களைப் பற்றி வெளிநாட்டுப் பயணிகளான நிக்கோலாவ் மானூசி மற்றும் கேப்டன் ஹாக்கின்ஸ் உள்ளிட்ட பலரும் தங்கள் பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிஸ் நாட்டு பயணி மனுசி அவருடைய குறிப்பில், ”அந்த மாதிரியான நாணயங்கள் தற்போது இல்லை என்றாலும், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் போன்ற முகலாய பேரரசர்கள் அவற்றைத் தூதர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கினர்” என்று தெரிவித்துள்ளார்.

Coin
வாட்டர்கேட் ஊழல் : அமெரிக்கா நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்த ஓர் ஊழல் - பரபரப்பான வரலாறு

"ஜஹாங்கீர் தனது சுயசரிதையில், துசுக்-இ-ஜஹாங்கிரி, 1000 தோலா எடையுள்ள ஒரு தங்க மொஹரைப் பற்றி எழுதியிருக்கிறார். அதனை அவர் ஈரான் ஷாவின் தூதர் யாத்கர் அலியிடம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 10, 1612 அன்று பேரரசருக்கான பரிசாக 20. 3 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த அபூர்வமான தங்க நாணயம் ஆக்ராவில் அச்சிடப்பட்டது" என்று அவர் கூறினார்.

மேலும் சல்மா கூறுகையில், இந்த நாணயம் எப்படி ஹைதராபாத்திற்கு வந்திருக்கும்? என்பது தெளிவற்றதாகவே உள்ளது என்றார். பீஜப்பூர் கைப்பற்றப்பட்டபோது, சோர்வுற்று பசியுடன் இருந்த தனது வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவுரங்கசீப் ஏற்பாடு செய்ததை சல்மா இங்கே குறிப்பிடுகிறார்.

Coin
வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com